செய்திகள் :

ராமர் பாலத்தை தரிசித்தேன்: பிரதமர் மோடி

post image

ராமேசுவரத்தில் புதிய பாம்பன் ரயில் பாலத்தைத் திறந்து வைப்பதற்காக, ஹெலிகாப்டரில் சென்ற பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டரில் இருந்தே ராமர் பாலம் பகுதியை தரிசித்ததாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, பிரதமர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, இலங்கையில் இருந்து திரும்பி வரும் வழியில் ராமர் சேது தரிசனத்துடன் ஆசிர்வாதமும் கிடைத்தது. அயோத்தியில் சூரிய திலகம் நடந்த அதே நேரத்தில், ராமர் பாலத்தின் தரிசனமும் தற்செயலாக கிடைத்தது. இருவரின் தரிசனமும் பெறுவது பாக்கியமே. நம் அனைவரையும் ஒன்றிணைக்கும் சக்தியாக உள்ள ஸ்ரீராமரின் ஆசிர்வாதம், எப்போதும் நம் மீது நிலைத்திருக்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.

இலங்கை சென்றிருந்த பிரதமர் மோடி, பாம்பன் புதிய பாலத்தை திறந்து வைப்பதற்காக, எம்ஐ 17 ரக ஹெலிகாப்டரில் மண்டபத்துக்கு வந்தடைந்தார்.

மண்டபத்தில் தரையிறங்கிய பிரதமர் மோடியை, ஆளுநர் ரவி, ராமநாதபுரம் ஆட்சியர், தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், மத்திய இணையமைச்சர் எல். முருகன், நவாஸ்கனி எம்.பி., ஜி.கே. வாசன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, வானதி ஸ்ரீனிவாசன், நயினார் நாகேந்திரன், சுதாகர் ரெட்டி, ஹெச். ராஜா தமிழிசை சௌந்தரராஜன், கருப்பு முருகானந்தம், சரத்குமார், அரவிந்த மேனன் ஆகியோர் வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து, தமிழர்களின் பாரம்பரிய உடையான பட்டு வேட்டி - சட்டையுடன் திறப்பு விழா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு, ராமேசுவரம் - தாம்பரம் ரயில் போக்குவரத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதையும் படிக்க:மும்பை - நியூயார்க்: எங்கு வாழ்வது சிறந்தது? விளக்கத்துடன்!

பேரவையிலிருந்து அதிமுகவினர் வெளியே(ற்றம்)! செங்கோட்டையன் உள்ளே!!

தமிழக சட்டப்பேரவையில் இன்று அந்த தியாகி யார் என்ற வாசகம் பொறித்த பேட்ஜ் அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டு, பதாகைககளைக் காட்டியதால் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.ஆனால், அதிமுக எம்எல... மேலும் பார்க்க

36 மணி நேரத்திற்கு முன்பே உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி!

வங்கக்கடலில் எதிர்பாபர்க்கப்பட்ட நேரத்தை விட முன்னதாகவே காற்றழுத்தத் தாழ்வு உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில், தென் வங்கக்கடல் பகுதியில் க... மேலும் பார்க்க

9 மாத ஆட்சியில் எந்த திட்டமும் கொண்டுவர முடியாது: இபிஎஸ்

9 மாத ஆட்சியில் எந்த திட்டமும் கொண்டுவர முடியாது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.டாஸ்மாக் கடைகளில் ஊழல் நடைபெறுவதைக் குறிக்கும் வகையில், அந்த தியாகி யார் என எழுதப்ப... மேலும் பார்க்க

தியாகி யார்? நொந்து நூடுல்ஸ்ஸான அதிமுகவினர்தான்: பேரவையில் ஸ்டாலின் பதில்

சென்னை: தமிழக சட்டப்பேரவைக்கு வந்த அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் 'அந்த தியாகி யார்?' என எழுதப்பட்ட பேட்ஜ் அணிந்துவந்த நிலையில், நொந்து நூடுல்ஸ்ஸான அதிமுகவினர்தான் தியாகிகள் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ... மேலும் பார்க்க

பேரவையிலிருந்து அதிமுகவினர் வெளியேற்றம்; ஒருநாள் சஸ்பெண்ட்

சென்னை: டாஸ்மாக் விவகாரம் குறித்து அவையில் பேச அனுமதி மறுக்கப்பட்டதால் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். பதாகைகளைகளைக் காட்டியதால் அவர்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்களை ஒருநாள் அவை நடவடிக்கைகளில் பங்கேற்... மேலும் பார்க்க

அமைச்சர் கே.என்.நேரு வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை!

தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேருவின் வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.அமைச்சர் கே. என். நேருவின் சகோதரரின் கட்டுமான நிறுவனத்துக்குச் சொந்தமான 10-க்கும் மே... மேலும் பார்க்க