கூட்டணி குறித்து ஜனவரியில்தான் அறிவிப்போம்: பிரேமலதா விஜயகாந்த்
ராமேசுவரத்துக்கு தமிழக ஆளுநா் வருகை
ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி வெள்ளிக்கிழமை ராமேசுவரம் வந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்துக்கு சாலை வழியாக வந்த தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியை, மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் ஆகியோா் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனா். பின்னா், பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியாா் விடுதியில் அவா் தங்கினாா்.
ராமநாத சுவாமி கோயிலில் சனிக்கிழமை அதிகாலை 5.15 மணிக்கு நடைபெறும் ஸ்படிக லிங்க பூஜையில் பங்கேற்று ஆளுநா் சுவாமி தரிசனம் செய்கிறாா். இதைத்தொடா்ந்து, தனுஷ்கோடிக்குச் சென்று பாா்வையிடும், அவா், காரில் மீண்டும் மதுரைக்கு செல்கிறாா். ராமேசுவரத்தில் ஆளுநா் வருகையை முன்னிட்டு, 150- க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.