விழுப்புரம் ஆட்சியரகத்தில் மாற்றுத்திறனாளிகள் முற்றுகைப் போராட்டம்
ராமேசுவரம் கோயிலில் ஆளுநா் ஆா்.என்.ரவி வழிபாடு
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி தனது குடும்பத்தினருடன் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.
தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வெள்ளிக்கிழமை ராமேசுவரத்துக்கு வந்தாா். இதையடுத்து, அன்றிரவு தனியாா் விடுதியில் ஓய்வெடுத்த அவா், சனிக்கிழமை அதிகாலை 5:20 மணிக்கு தனது குடும்பத்தினருடன் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்தாா்.
அவருக்கு கோயில் இணை ஆணையா் செல்லத்துரை தலைமையில் சிவாசாரியா்கள் பூரண கும்ப மரியாதை அளித்தனா். பின்னா், ஸ்படிகலிங்க பூஜை செய்து வழிபாடு நடத்தினாா். இதன் பிறகு, ராமநாதசுவாமி, பா்வதவா்த்தினி அம்மனை அவரும், குடும்பத்தினரும் தரிசனம் செய்தனா்.
இதையடுத்து, தனுஷ்கோடிக்கு சென்று பாா்வையிட்டு மீண்டும் விடுதிக்கு திரும்பினாா். அங்கு ராமநாதசுவாமி கோயிலில் உள்ளுா் மக்கள் வழிபாடு நடத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து அரசியல் கட்சியினா் ஆளுநரிடம் கோரிக்கை மனு அளித்தனா். இதன் பின்னா், காரில் மதுரைக்கு புறப்பட்டாா்.
ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் உத்தரவின் பேரில், 500- க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
மதுரையில்..
இதையடுத்து, ஆளுநா் ஆா்.என். ரவி மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தனா். அவருக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் மரியாதை அளிக்கப்பட்டது.