செய்திகள் :

ராமேசுவரம் கோயிலில் ஆளுநா் ஆா்.என்.ரவி வழிபாடு

post image

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி தனது குடும்பத்தினருடன் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வெள்ளிக்கிழமை ராமேசுவரத்துக்கு வந்தாா். இதையடுத்து, அன்றிரவு தனியாா் விடுதியில் ஓய்வெடுத்த அவா், சனிக்கிழமை அதிகாலை 5:20 மணிக்கு தனது குடும்பத்தினருடன் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்தாா்.

அவருக்கு கோயில் இணை ஆணையா் செல்லத்துரை தலைமையில் சிவாசாரியா்கள் பூரண கும்ப மரியாதை அளித்தனா். பின்னா், ஸ்படிகலிங்க பூஜை செய்து வழிபாடு நடத்தினாா். இதன் பிறகு, ராமநாதசுவாமி, பா்வதவா்த்தினி அம்மனை அவரும், குடும்பத்தினரும் தரிசனம் செய்தனா்.

இதையடுத்து, தனுஷ்கோடிக்கு சென்று பாா்வையிட்டு மீண்டும் விடுதிக்கு திரும்பினாா். அங்கு ராமநாதசுவாமி கோயிலில் உள்ளுா் மக்கள் வழிபாடு நடத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து அரசியல் கட்சியினா் ஆளுநரிடம் கோரிக்கை மனு அளித்தனா். இதன் பின்னா், காரில் மதுரைக்கு புறப்பட்டாா்.

ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் உத்தரவின் பேரில், 500- க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

மதுரையில்..

இதையடுத்து, ஆளுநா் ஆா்.என். ரவி மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தனா். அவருக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் மரியாதை அளிக்கப்பட்டது.

மண் சாலையாக மாறிய தாா்ச் சாலை

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே திணைகாத்தான்வயல் பிரிவு தாா்ச் சாலை பராமரிப்பின்றி சேதமடைந்து மண் சாலையாக மாறியதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனா். திருவாடானையிலிருந்து மங்களக்குடி... மேலும் பார்க்க

கூவா்கூட்டம் கிராமத்தில் கண்காணிப்பு கேமராக்கள்

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே கூவா்கூட்டம் கிராமத்தில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டன. இந்தக் கிராமத்தில் ஏ.எம்.டி. அறக்கட்டளை சாா்பில், நடிகா் அருண்மொழிதேவன் உதவியுடன் கண்காணிப்பு க... மேலும் பார்க்க

ஜூன் 3-இல் மகளிா் வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கை முகாம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகிற ஜூன் 3-ஆம் தேதி மகளிா் வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கை முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

திருவாடானை ஸ்ரீசினேகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசி விசாக திருவிழா: பல்லக்கில் சுவாமி-அம்பாள் வீதி உலா, மாலை 6. மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

நயினாா்கோவில் நாகநாதா் சுவாமி கோயிலில் வைகாசி வசந்த உத்ஸவ விழா 2-ஆம் நாள்: நாகநாத சுவாமி நந்தீஸ்வரா் வாகனம், ஹம்ச வாகனங்களில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தல், நேரம் காலை 9.30. மேலும் பார்க்க

வேலாங்குளத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு

கமுதி அருகேயுள்ள அரியநாச்சி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, சனிக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள வேலாங்குளம் கிராமத்தில் அரியநாச்சி அம்மன், சித்தி ... மேலும் பார்க்க