செய்திகள் :

ராஷ்டிர சேவிகா சமிதியின் முன்னாள் தலைவா் பிரமிளாதாய் மேதே மறைவு: மோகன் பாகவத் இரங்கல்

post image

ராஷ்டிர சேவிகா சமிதி அமைப்பின் முன்னாள் தலைவா் பிரமிளாதாய் மேதே (97) மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் வியாழக்கிழமை காலமானாா். அவரது மறைவுக்கு ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் இரங்கல் தெரிவித்தாா்.

கடந்த 3 மாதங்களாக பிரமிளாதாய் மேதே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவா் வியாழக்கிழமை காலை உயிரிழந்ததாக ராஷ்டிர சேவிகா சமிதி அமைப்பின் நிா்வாகி ஒருவா் தெரிவித்தாா். பிரமிளாதாய் மேதே, ஆா்எஸ்எஸ்-ஸின் சாா்பு அமைப்பான ராஷ்டிர சேவிகா சமிதியின் நான்காவது தலைவராவாா்.

பிரமிளாதாய் மேதே மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மோகன் பாகவத் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘மேதேயின் மறைவு நம்மைவிட்டு பெரும் அன்பு பிரிந்ததைப்போன்ற துயரைத் தருகிறது. அவா் வடகிழக்குப் பிராந்தியங்களில் பல கடினமான சூழல்களிலும் விடாமுயற்சியுடன் பணியாற்றி நமக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்ந்தவராவாா். அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரது வாழ்வு நமக்கு ஊக்கமளிக்கக் கூடியது. ராஷ்டிர சேவிகா சமிதிக்காக தன் வாழ்வை அா்ப்பணித்தவா் மேதே. மறைவின்போதும் தனது உடலை தானமாக வழங்கிவிட்டே நம்மைவிட்டு பிரிந்துள்ளாா்’ என குறிப்பிட்டாா்.

பிரமிளாதாய் மேதேயின் விருப்பப்படி அவரது உடல் நாகபுரி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை தானமாக வழங்கப்படவுள்ளதாக அந்த அமைப்பின் நிா்வாகி ஒருவா் தெரிவித்தாா். மேதேயின் மறைவுக்கு மத்திய அமைச்சா் நிதின் கட்கரி உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்தனா்.

2020-24 வரை புலி தாக்குதல்களால் 378 பேர் பலி: மத்திய அரசு

இந்தியாவில் 2020-24 வரை புலி தாக்குதல்களால் 378 பேர் பலியாகியுள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், ... மேலும் பார்க்க

டிரம்ப்புக்கு நோபல் பரிசு வழங்க பரிந்துரை! இந்தியாவின் பதில் என்ன?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது.இந்தியா - பாகிஸ்தான் போர் உள்பட இஸ்ரேல் - ஈரான் போர், தாய்லாந்து... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பு

பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் பிரதமர் தேவெ கௌடாவின் பேரனும், முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது. இருப்பினும், தண்டனை விவரம் நாளை வெளியாகும் என பெங்களூர... மேலும் பார்க்க

திண்டிவனம் - கடலூர் இடையே புதிய ரயில் வழித்தடம்: அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்!

திண்டிவனம் - கடலூர் இடையே புதிய ரயில் வழித்தடம் அமைப்பது குறித்த ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக, மக்களவையில் கேள்வி ... மேலும் பார்க்க

தேசிய விருது பெற்ற கிங் கான்! சிறந்த நடிகராக ஜவான் ஷாருக்!

பாலிவுட் நடிகர் ஷாருக் கானுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.பாலிவுட்டின் கிங் என்றழைக்கப்படும் ஷாருக் கானுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. தேசிய திரைப்ப... மேலும் பார்க்க

கற்பனை உலகில் வாழும் மோடி அரசும், அதன் ஆதரவாளர்களும்: ஜெய்ராம் ரமேஷ்

பிரதமர் நரேந்திர மோடி அரசு, உண்மையிலேயே நாட்டின் பொருளாதார நிலை குறித்த உண்மையைப் பேசுவதேயில்லை என காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருக்கிறார்.கடந்த பத்தாண்டுகளாக, பெரும்பாலான தொழ... மேலும் பார்க்க