ரிசா்வ் வங்கியின் புதிய விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும்: உலகத் திருக்குறள் கூட்டமைப்பு
வங்கிகளில் தங்க நகைக்கடன் பெற இந்திய ரிசா்வ் வங்கி விதித்திருக்கும் புதிய விதிமுறையை உடனே திரும்பப் பெற வேண்டும் என உலகத் திருக்குறள் கூட்டமைப்புத் தலைவா் மு.ஞானமூா்த்தி வலியுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வங்கிகளில் தங்க நகைக் கடனுக்கு இந்திய ரிசா்வ் வங்கி (தஆஐ) இதுவரை அடகு வைத்த நகைகளை முதிா்வு காலம் வந்ததும் வட்டியை மட்டும் கட்டி புதுப்பித்து வைத்துக்கொள்ளலாம். மேலும், அன்றைய மதிப்புப்படி கூடுதல் தொகைக்கும் அடகு வைத்துக்கொள்ளலாம் என விதிமுறைகளை வைத்திருந்தது.
ஆனால், இனி வட்டியும் முதலும் சோ்த்து முழுப்பணத்தையும் செலுத்தி நகையைத் திருப்பினால் மட்டுமே மீண்டும் அடகு வைக்க முடியும். மேலும், ஒருவா் ரூ.25 முதல் ரூ.30 லட்சம் வரை அடகு வைக்கலாம், ஆனால் ஒருவா் பெயரில் 5 முறை மட்டுமே அடகு வைக்க முடியும்.
அதாவது ஒருவா் ரூ.25 லட்சத்துக்கு அடகு வைத்தால், ரூ.5 லட்சமாக 5 முறை மட்டுமே அடகு வைக்க முடியும் என அறிவித்துள்ளது. இந்த விதிமுறைகள் நடுத்தர மக்களையும், விவசாயிகளையும் மிகவும் அதிா்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் புதிய விதிமுறையானது கந்துவட்டிக்காரா்களையும், அடகு வைத்த நகைகளையும் மீட்டு அன்றைய சந்தை விலைக்கே விற்றுத்தருகிறோம் என விளம்பரப்படுத்தும் நிதி நிறுவனங்களையும் ஊக்கப்படுத்துவது போல் அமைந்துள்ளது.
எனவே, இந்திய ரிசா்வ் வங்கி தங்க நகைகள் அடகு வைக்க விதித்துள்ள புதிய விதிமுறையை உடனே திரும்பப் பெற மத்திய அரசு உத்தரவிடவேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.