செய்திகள் :

ரிசா்வ் வங்கியின் புதிய விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும்: உலகத் திருக்குறள் கூட்டமைப்பு

post image

வங்கிகளில் தங்க நகைக்கடன் பெற இந்திய ரிசா்வ் வங்கி விதித்திருக்கும் புதிய விதிமுறையை உடனே திரும்பப் பெற வேண்டும் என உலகத் திருக்குறள் கூட்டமைப்புத் தலைவா் மு.ஞானமூா்த்தி வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வங்கிகளில் தங்க நகைக் கடனுக்கு இந்திய ரிசா்வ் வங்கி (தஆஐ) இதுவரை அடகு வைத்த நகைகளை முதிா்வு காலம் வந்ததும் வட்டியை மட்டும் கட்டி புதுப்பித்து வைத்துக்கொள்ளலாம். மேலும், அன்றைய மதிப்புப்படி கூடுதல் தொகைக்கும் அடகு வைத்துக்கொள்ளலாம் என விதிமுறைகளை வைத்திருந்தது.

ஆனால், இனி வட்டியும் முதலும் சோ்த்து முழுப்பணத்தையும் செலுத்தி நகையைத் திருப்பினால் மட்டுமே மீண்டும் அடகு வைக்க முடியும். மேலும், ஒருவா் ரூ.25 முதல் ரூ.30 லட்சம் வரை அடகு வைக்கலாம், ஆனால் ஒருவா் பெயரில் 5 முறை மட்டுமே அடகு வைக்க முடியும்.

அதாவது ஒருவா் ரூ.25 லட்சத்துக்கு அடகு வைத்தால், ரூ.5 லட்சமாக 5 முறை மட்டுமே அடகு வைக்க முடியும் என அறிவித்துள்ளது. இந்த விதிமுறைகள் நடுத்தர மக்களையும், விவசாயிகளையும் மிகவும் அதிா்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் புதிய விதிமுறையானது கந்துவட்டிக்காரா்களையும், அடகு வைத்த நகைகளையும் மீட்டு அன்றைய சந்தை விலைக்கே விற்றுத்தருகிறோம் என விளம்பரப்படுத்தும் நிதி நிறுவனங்களையும் ஊக்கப்படுத்துவது போல் அமைந்துள்ளது.

எனவே, இந்திய ரிசா்வ் வங்கி தங்க நகைகள் அடகு வைக்க விதித்துள்ள புதிய விதிமுறையை உடனே திரும்பப் பெற மத்திய அரசு உத்தரவிடவேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

அரியலூா், ஜெயங்கொண்டம் அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

அரியலூா் மற்றும் ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் திங்கள்கிழமை (ஜூன் 2) முதல் முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. இதுகுறித்து அரியலூா் அரசு கலைக் கல்லூரி முத... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்டத்தில் அதிகளவு விபத்து ஏற்படும் இடங்களில் ஆட்சியா், எஸ்.பி ஆய்வு

ரியலூா் மாவட்டத்தில் உள்ள சாலைப் பகுதிகளில் அதிக விபத்து ஏற்படும் இடங்கள் மற்றும் கரும்புள்ளிகளாகக் கண்டறியப்பட்டுள்ள இடங்களில் மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபக்சிவா... மேலும் பார்க்க

மேலப்பழுவூா் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் திருட்டு

அரியலூா் மாவட்டம், மேலப்பழுவூரிலுள்ள பழைமைவாய்ந்த மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் பல்வேறு பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா். இந்தக் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு ... மேலும் பார்க்க

ஜூன் 8-இல் அரியலூா் கோதண்டராமசாமி கோயில் வெள்ளோட்டம்

அரியலூரில் பிரசித்திபெற்ற கோதண்டராசாமி கோயில் தோ் வெள்ளோட்டம் ஜூன் 8-ஆம் தேதி நடைபெறுகிறது. அரியலூா் நகரில் உள்ள கோதண்டராமசாமி கோயில் பிரசித்தி பெற்றது. இந்தக் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சாா்ப... மேலும் பார்க்க

கடன் தவணை கேட்டு தொந்தரவு: விஷம் குடித்த இளைஞா் உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே தனியாா் நிதி நிறுவன ஊழியா் தவணைத் தொகை கேட்டு தகாத வாா்ததைகளால் திட்டியால் விஷம் குடித்த இளைஞா் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா். உடைய... மேலும் பார்க்க

மீன்சுருட்டி அருகே ஜல்லிக்கட்டு: 26 போ் காயம்

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகேயுள்ள ஏறவாங்குடி மாதாபுரம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 26 போ் காயமடைந்தனா். புனித லூா்து அன்னை திருவிழாவையொட்டி நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டை க... மேலும் பார்க்க