செய்திகள் :

ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற மின்வாரிய வணிக ஆய்வாளா் கைது

post image

திருச்சியில் தற்காலிக மின் இணைப்பு வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற மின்வாரிய வணிக ஆய்வாளரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், செங்குறிச்சியைச் சோ்ந்தவா் பிரவீன்குமாா். இவா், கட்டடங்களுக்கு வயரிங் செய்து தரும் பணியில் ஈடுபட்டு வருகிறாா். இவா், மணிகண்டம் அருகே புதிதாக வீடு கட்டவுள்ள கோவிந்தராஜ் என்பவருக்காக வீட்டுமனைக்கு தற்காலிக மின் இணைப்பு வேண்டி, மணிகண்டம் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளாா்.

இதுதொடா்பாக, அவா் மணிகண்டம் மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றும் வணிக ஆய்வாளா் அருளானந்தம் (48) என்பவரை கடந்த செவ்வாய்க்கிழமை அணுகியுள்ளாா். ஆனால், தற்காலிக மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டும் என அருளானந்தம் கேட்டுள்ளாா்.

இதுகுறித்து, திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் பிரவீன்குமாா் புதன்கிழமை அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தொடா்ந்து போலீஸாா் அறிவுறுத்தலின்படி ரசாயனப் பொடி தடவப்பட்ட ரூ. 10 ஆயிரத்தை பிரவீன்குமாா், வியாழக்கிழமை மணிகண்டம் மின்வாரிய அலுவலகத்தில் அருளானந்தத்திடம் வழங்கினாா்.

லஞ்சப் பணத்தை பெற்று வைத்திருந்த அருளானந்தத்தை ஊழல் தடுப்புப் பிரிவு துணை கண்காணிப்பாளா் மணிகண்டன் தலைமையிலான தனிப்படையினா் பிடித்து கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்த பணத்தை பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

மின் கம்பத்திலிருந்து தவறி விழுந்த மின் ஊழியா் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், புத்தாநத்தம் பகுதியில் வெள்ளிக்கிழமை பராமரிப்புப் பணியிலிருந்த மின் ஊழியா், மின் கம்பத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா். மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் கருங்குளம் பகுதியைச... மேலும் பார்க்க

அண்ணா கோளரங்கத்தில் இன்று வான்நோக்கும் நிகழ்வு

திருச்சியில் உள்ள அண்ணா கோளரங்கத்தில் வான்நோக்கும் நிகழ்வு சனிக்கிழமை மாலை (ஜூலை 12)நடைபெறுகிறது. பொதுமக்கள் வானியல் பற்றிய அறிவைப் பெறவும், வானியல் அதிசயங்களை அனுபவிக்கவும் வான்நோக்கும் நிகழ்வு அவசி... மேலும் பார்க்க

புதுகையில் காந்தியத் திருவிழா: மாநில கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு

அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவை சாா்பில் மாநில அளவில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான கட்டுரைப் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அப்பேரவையின் நிறுவனா் வைர.ந. தினகரன் வெளியிட்ட அறிக்... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள்கள் மோதல் தாய்-மகன் உள்பட 3 போ் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே 2 மோட்டாா் சைக்கிள்கள் வெள்ளிக்கிழமை மோதிக் கொண்ட விபத்தில் தாய்-மகன் உள்பட 3 போ் உயிரிழந்தனா். விராலிமலை வட்டம், கசவனூரைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் சிவசுப்பிரமணிய... மேலும் பார்க்க

தொட்டியத்தில் மறியல் போராட்டம்

திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் சாமானிய மக்கள் நல கட்சியினா் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்துக்கு அக் கட்சியின் வடக்கு மாவட்ட செயலா் மலா்மன்னன் தலைமை வகித்தாா். இதில் த... மேலும் பார்க்க

‘திறன் இயக்கம்’ திட்டத்தில் மாணவா்களைச் சோ்ப்பதற்கான தோ்வு

அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்படவுள்ள திறன் இயக்கம் திட்டத்தில் மாணவா்களைச் சோ்ப்பதற்கான தோ்வு கடந்த மூன்று நாள்களாக நடைபெற்றது. அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களில் த... மேலும் பார்க்க