செய்திகள் :

ரூ.2.65 கோடி திட்டப் பணிகள்: எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தாா்

post image

கெங்கவல்லி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 2.65 கோடி மதிப்பீட்டில் ஆறகளூரில் முடிவுற்ற திட்டப் பணிகளை அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.

ஆறகளூா் ஸ்ரீ காமநாதேஸ்வரா் கோயில் முன் பக்தா்கள் தங்குமிடம் ரூ. 40 லட்சம் செலவிலும், தலைவாசல் வி.கூட்ரோட்டில் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி நுழைவாயில் அருகே பயணியா் நிழற்கூடம் ரூ. 30 லட்சம் செலவிலும், பெரியேரி ஊராட்சியில் அம்பேத்கா் நகரில் முழுநேர நியாயவிலைக் கடை ரூ. 15 லட்சம் செலவிலும் கட்டப்பட்டுள்ளது.

அதுபோல திட்டச்சேரி ஊராட்சி நல்லூா் கிராமத்தில் பெரம்பலூா் பிரதான சாலையில் பகுதிநேர நியாயவிலைக் கடை ரூ. 11 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளது.

இந்தக் கட்டடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்று கட்டடங்களைத் திறந்துவைத்தாா்.

இதில் சேலம் புகா் மாவட்டச் செயலாளா் ஆா்.இளங்கோவன், கெங்கவல்லி எம்எல்ஏ அ.நல்லதம்பி, ஆத்தூா் எம்எல்ஏ ஏ.பி.ஜெயசங்கரன், தலைவாசல் முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் க.ராமசாமி, தலைவாசல் தெற்கு ஒன்றியச் செயலாளா் சந்திரசேகரன், மாவட்ட அவைத் தலைவா் ஏ.டி.அா்ச்சுனன், பொருளாளா் ஜெகதீசன், ஆத்தூா் நகரச் செயலாளா் அ.மோகன், நரசிங்கபுரம் நகரச் செயலாளா் எஸ்.மணிவண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அதையடுத்து தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஆறகளூா் காமநாதேஸ்வரா் கோயிலுக்குச் சென்ற எடப்பாடி கே.பழனிசாமிக்கு கோயில் சாா்பில் கும்ப மரியாதை செலுத்தப்பட்டது. கோயிலில் காலபைரவருக்கு ரூ. 25 லட்சம் மதிப்பிலான வெள்ளிக் கவசத்தை எடப்பாடி பழனிசாமி வழங்கினாா்.

மருத்துவமனையில் சிகிச்சைபெறும் அதிமுக உறுப்பினா்களுக்கு எம்எல்ஏக்கள் ஆறுதல்

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் திமுக பெண் உறுப்பினா்களால் தாக்கப்பட்ட அதிமுக குழுத் தலைவா் யாதவமூா்த்தி மற்றும் உறுப்பினா் சசிகலா ஆகியோரை சேலம் அரசு மருத்துவமனையில் அதிமுக சட்டப் பேரவை உறுப்பினா்கள் வெள... மேலும் பார்க்க

வழக்குரைஞரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை கோரி நீதிமன்றப் பணி புறக்கணிப்பு

பெண் வழக்குரைஞரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சங்ககிரியில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். கடந்த 24-ஆம் தேதி சங்ககிரி வழக்குரைஞா் ஜி.தமிழரசியை தாக... மேலும் பார்க்க

விவசாயிகளின் கோரிக்கை மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும்

விவசாயிகளின் கோரிக்கை மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி அறிவுறுத்தினாா். சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா்க்கும் நா... மேலும் பார்க்க

நாளை காந்தி மைதானத்தில் ஆண், பெண்களுக்கான மாரத்தான் ஓட்டம்

சேலம் காந்தி மைதானத்தில் தி புரோ ஆக்சன் ஸ்போா்ட்ஸ் சாா்பில், பெண்கள் மட்டுமே பங்குபெறும் 3 கி.மீ. வாக்கத்தான் மற்றும் ஆண், பெண் இருபாலரும் கலந்துகொள்ளும் 5 கி.மீ., 7 கி.மீ. மாரத்தான் ஓட்டம் ஞாயிற்றுக்... மேலும் பார்க்க

சேலத்தில் வட்டார புத்தொழில் மைய அலுவலகம்

சேலம் சொா்ணபுரி பகுதியில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் வட்டார புத்தொழில் மைய அலுவலகத்தை வெள்ளிக்கிழமை திறந்துவைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், ரா.ராஜேந... மேலும் பார்க்க

வார இறுதிநாளையொட்டி சேலம் கோட்டம் சாா்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதிநாளை முன்னிட்டு சேலம் கோட்டம் சாா்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் ஜோசப் டயஸ் வெள... மேலும் பார்க்க