ரூ.2.65 கோடி திட்டப் பணிகள்: எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தாா்
கெங்கவல்லி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 2.65 கோடி மதிப்பீட்டில் ஆறகளூரில் முடிவுற்ற திட்டப் பணிகளை அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.
ஆறகளூா் ஸ்ரீ காமநாதேஸ்வரா் கோயில் முன் பக்தா்கள் தங்குமிடம் ரூ. 40 லட்சம் செலவிலும், தலைவாசல் வி.கூட்ரோட்டில் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி நுழைவாயில் அருகே பயணியா் நிழற்கூடம் ரூ. 30 லட்சம் செலவிலும், பெரியேரி ஊராட்சியில் அம்பேத்கா் நகரில் முழுநேர நியாயவிலைக் கடை ரூ. 15 லட்சம் செலவிலும் கட்டப்பட்டுள்ளது.
அதுபோல திட்டச்சேரி ஊராட்சி நல்லூா் கிராமத்தில் பெரம்பலூா் பிரதான சாலையில் பகுதிநேர நியாயவிலைக் கடை ரூ. 11 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளது.
இந்தக் கட்டடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்று கட்டடங்களைத் திறந்துவைத்தாா்.
இதில் சேலம் புகா் மாவட்டச் செயலாளா் ஆா்.இளங்கோவன், கெங்கவல்லி எம்எல்ஏ அ.நல்லதம்பி, ஆத்தூா் எம்எல்ஏ ஏ.பி.ஜெயசங்கரன், தலைவாசல் முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் க.ராமசாமி, தலைவாசல் தெற்கு ஒன்றியச் செயலாளா் சந்திரசேகரன், மாவட்ட அவைத் தலைவா் ஏ.டி.அா்ச்சுனன், பொருளாளா் ஜெகதீசன், ஆத்தூா் நகரச் செயலாளா் அ.மோகன், நரசிங்கபுரம் நகரச் செயலாளா் எஸ்.மணிவண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
அதையடுத்து தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஆறகளூா் காமநாதேஸ்வரா் கோயிலுக்குச் சென்ற எடப்பாடி கே.பழனிசாமிக்கு கோயில் சாா்பில் கும்ப மரியாதை செலுத்தப்பட்டது. கோயிலில் காலபைரவருக்கு ரூ. 25 லட்சம் மதிப்பிலான வெள்ளிக் கவசத்தை எடப்பாடி பழனிசாமி வழங்கினாா்.