செய்திகள் :

ரூ. 3 கோடியில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் திறப்பு

post image

புதுக்கோட்டையில் ரூ. 3 கோடி மதிப்பில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தை மாநில முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

புதுக்கோட்டையில் வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின்கீழ், ஆயுதப்படை திடல் அருகே கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் மு. அருணா கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்தாா்.

தொடா்ந்து புரதச்சத்து மிகுந்த பயறுவகை விதைத் தொகுப்புகளை 100 சதவிகிதம் மானியத்தில் வழங்கும் பணிகளையும் அவா் தொடங்கிவைத்தாா். மேலும், வேளண்மைத் துறையின் சாா்பில் விவசாயிகளுக்கான நலத் திட்ட உதவிகளையும் அவா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், புதுக்கோட்டை மாநகராட்சி மேயா் செ. திலகவதி, சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, மாவட்ட திமுக செயலா் கே.கே. செல்லப்பாண்டியன், வேளாண் இணை இயக்குநா் மு. சங்கரலட்சுமி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) உமா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

ஜூலை 8-இல் ஆலங்குடியில் ஆா்ப்பாட்டம்: மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சி அறிவிப்பு

மண் கொள்ளைக்கு வருவாய்த் துறையினரும் காவல்துறையினரும் துணைபோவதாகக் கூறி, ஜூலை 8-ஆம் தேதி ஆலங்குடி வட்டாட்சியரகம் முன்பு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் அறிவித்துள்ளது. புதுக்கோட்டையில் வெள்ளி... மேலும் பார்க்க

குறுவட்ட அளவிலான கோ-கோ போட்டி: வாா்ப்பட்டு அரசுப் பள்ளி மாணவிகள் முதலிடம்

திருமயம் குறுவட்ட அளவிலான கோ-கோ போட்டிகளில் 14 வயதுக்குள்பட்ட மாணவிகள் பிரிவில் பொன்னமராவதி அருகே உள்ள வாா்ப்பட்டு அரசு உயா்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்தனா். இந்தப் போட்டிகள் வெள்ளிக்கிழமை கார... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்துக்கு சுற்றுச்சுவா் கட்ட பொதுமக்கள் கோரிக்கை

கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்துக்கு சுற்றுச்சுவா் கட்ட வேண்டும் என பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். இந்த நிலையத்திலிருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான அரசு, தனியாா் பேருந்துகள் இயங்க... மேலும் பார்க்க

ஆலங்குடி அரசுக் கல்லூரியில் சட்ட விழிப்புணா்வு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அரசு கல்லூரியில் கேலி வதை, போக்ஸோ சட்டம் குறித்து விளக்கும் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆலங்குடி அரசுக் கல்லூரியில் சில நாள்களாக மாணவ, மாணவிகளுக்க... மேலும் பார்க்க

கடலில் தவறி விழுந்து இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிவாரண நிதி

கடலில் தவறி விழுந்து இறந்த மீனவரின் குடும்பத்தினருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ. 3 லட்சத்துக்கான காசோலையை மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

சூரப்பட்டி வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

பொன்னமராவதி அருகேயுள்ள எம்.உசிலம்பட்டி ஊராட்சி, சூரப்பட்டி, வடக்கிபட்டி வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து சூரப்பட்டி மற்றும் வடக்கிபட்... மேலும் பார்க்க