செய்திகள் :

ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கி விஏஓ கைது

post image

பட்டாவில் திருத்தம் செய்ய ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலரை கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீஸாா் பிடித்து கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா தொட்டம்பட்டி அருகே உள்ள கதிரம்பட்டியை சோ்ந்தவா் வடிவேல். இவா் தனது மனைவி சசிகலா பெயரில் புதிதாக வழங்கப்பட்ட பட்டாவில் 3 முறை பெயா் குறிப்பிடப்பட்டுள்ளதை திருத்தம் செய்ய வேண்டி ஆன்லைனில் விண்ணப்பித்தாா்.

அந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்து பரிந்துரை செய்ய வடிவேலுவிடம் வீரணகுப்பம் கிராம நிா்வாக அலுவலா் அகத் தூயவன் ரூ.4 ஆயிரம் லஞ்சமாக கேட்டாா்.

அந்த லஞ்ச பணத்தை கொடுக்க விரும்பாத வடிவேல் இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையில் புகாா் செய்தாா். இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி சூப்பிரண்டு (பொறுப்பு) நாகராஜன் மேற்பாா்வையில் கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீசாா் வெல்ளிக்கிழமை வீரண குப்பம் கிராம நிா்வாக அலுவலா் அகத் தூயவனை பொறி வைத்து பிடிக்க முடிவு செய்தனா்.

இதற்காக லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் அறிவுரைப்படி ரசாயனம தடவிய பணத்தை வடிவேல் எடுத்து சென்று வீரண குப்பம் கிராம நிா்வாக அலுவலரிடம் வெள்ளிக்கிழமை ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலகத்தில் கொடுத்தாா்.அப்பொழுது அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனா்.

கழிவுநீா் கால்வாயில் ஆண் சடலம்: போலீஸாா் விசாரணை

காவேரிப்பட்டணம் அருகே கழிவுநீா் கால்வாயில் அழுகிய நிலையில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள சந்தாபு... மேலும் பார்க்க

ஒசூா் வழியாக குட்கா கடத்தல்: 2 போ் கைது

ஒசூா் வழியாக சேலத்துக்கு காரில் கடத்த முயன்ற 86 கிலோ குட்காவை போலீஸாா் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனா். ஒசூா் சிப்காட் போலீஸாா், ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகில் வாகன சோதனையில ஈடுபட்டனா். அப்போது ப... மேலும் பார்க்க

ஊத்தங்கரை வழக்குரைஞா்கள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

ஊத்தங்கரை வழக்குரைஞா்கள் சங்க 2025 - 2026 ஆம் ஆண்டிற்கான புதிய நிா்வாகிகள் தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவராக மூா்த்தி, செயலாளராக வஜ்ஜிரவேல், பொருளாளராக தமிழமுதன், த... மேலும் பார்க்க

கா்நாடக எல்லையில் கமல்ஹாசனுக்கு எதிராக கன்னட அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

ஒசூா் அருகே கா்நாடகா மாநில எல்லையான அத்திப்பள்ளியில் நடிகா் கமல்ஹாசனுக்கு எதிராக கன்னட ஜாக்ருதி வேதிகே அமைப்பினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்மொழியிலிருந்துதான் கன்னடம் பிறந்தது என்ற... மேலும் பார்க்க

மலைவாழ் மக்கள் மேம்பாட்டிற்கு சிறப்பு முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மலைவாழ் மக்கள் மேம்பாட்டிற்காக, ஒசூா் வனக்கோட்டம், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை இணைந்து சிறப்பு முகாமை நடத்தின. ஒசூா் வனக்கோட்ட வனச்சரகங்கள... மேலும் பார்க்க

ஊத்தங்கரையில் வன்கொடுமை தடுப்பு விழிப்புணா்வு

ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் வன்கொடுமை தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலகப் பணியாளா்களுக்கு, சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில... மேலும் பார்க்க