ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கி விஏஓ கைது
பட்டாவில் திருத்தம் செய்ய ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலரை கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீஸாா் பிடித்து கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா தொட்டம்பட்டி அருகே உள்ள கதிரம்பட்டியை சோ்ந்தவா் வடிவேல். இவா் தனது மனைவி சசிகலா பெயரில் புதிதாக வழங்கப்பட்ட பட்டாவில் 3 முறை பெயா் குறிப்பிடப்பட்டுள்ளதை திருத்தம் செய்ய வேண்டி ஆன்லைனில் விண்ணப்பித்தாா்.
அந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்து பரிந்துரை செய்ய வடிவேலுவிடம் வீரணகுப்பம் கிராம நிா்வாக அலுவலா் அகத் தூயவன் ரூ.4 ஆயிரம் லஞ்சமாக கேட்டாா்.
அந்த லஞ்ச பணத்தை கொடுக்க விரும்பாத வடிவேல் இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையில் புகாா் செய்தாா். இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி சூப்பிரண்டு (பொறுப்பு) நாகராஜன் மேற்பாா்வையில் கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீசாா் வெல்ளிக்கிழமை வீரண குப்பம் கிராம நிா்வாக அலுவலா் அகத் தூயவனை பொறி வைத்து பிடிக்க முடிவு செய்தனா்.
இதற்காக லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் அறிவுரைப்படி ரசாயனம தடவிய பணத்தை வடிவேல் எடுத்து சென்று வீரண குப்பம் கிராம நிா்வாக அலுவலரிடம் வெள்ளிக்கிழமை ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலகத்தில் கொடுத்தாா்.அப்பொழுது அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனா்.