செய்திகள் :

ரூ.6 கோடி மதிப்பு.. 6.8 கிலோ தங்கத்தில் கன்னியாகுமரி அம்மன் விக்கிரகம்- அர்ப்பணித்த கேரள தொழிலதிபர்!

post image

முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் அமைந்துள்ள ஸ்ரீ பகவதி அம்மன் திருக்கோயில் வரலாற்று சிறப்பு வாய்ந்த திருத்தலமாகும். கன்னியாகுமரி பகவதி அம்மனின் ஒளிவீசும் மூக்குத்திக்கு என தனி முக்கியத்துவம் உண்டு. பாணாசுரனை வதம் செய்ய கன்னியாகுமரி பகவதி அம்மனாக பார்வதி தேவி அவதரித்தார். பகவதி அம்மன் சிவபெருமானை நினைந்து ஒற்றைக்காலில் நின்று தவம் செய்த பாறைதான் இன்று கன்னியாகுமரி கடலில் விவேகானந்தர் நினைவுப்பாறையாக உள்ளது. ஸ்ரீபாதப்பாஐ என அறியப்படும் அந்த பாறையில் பகவதி அம்மனின் ஒற்றைக்கால்தடம் உள்ளதை பார்க்க முடியும். சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்ட கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் உள்ளூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும், பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபடுவது வழக்கம். பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறினால் காணிக்கை, சிறப்பு பூஜைகள் செய்துகொடுப்பது வழக்கம். அந்த வகையில் கேரளாவைச் சேர்ந்த பக்தர் ஒருவர் 6.8 கிலோ எடையில் தங்கத்தால் ஆன கன்னியாகுமரி பகவதி அம்மன் உற்சவர் சிலை ஒன்றை காணிக்கையாக வழங்கியுள்ளார்.

கன்னியாகுமரி பகவதி அம்மன் தங்க சிலை ஒப்படைப்பு

கேரள மாநிலம், கொல்லத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் ரவிப்பிள்ளை என்பவர் பகவதி அம்மன் விக்கிரகத்தை நேற்று கன்னியாகுமரி கோயில் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். இந்து சமய அறநிலையத்துறை கன்னியாகுமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், இணை ஆணையர் ஜான்சிராணி, கோயில் மேலாளர் ஆனந்த் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டனர். பகவதி அம்மன் சிலை மட்டும் 5.350 கிலோ எடையும், அம்மனை சுற்றி அமைக்கப்பட்டிருந்த தங்க பிரபை 1.450 கிலோ எடை என மொத்தம் 6.8 கிலோ தங்கத்தில் விக்கிரகம் அமைக்கப்பட்டிருந்தது. இதன் தற்போதைய மார்க்கெட் மதிப்பு 6 கோடி ரூபாய் ஆகும்.

பகவதி அம்மன் தங்க சிலை சரிபார்க்கும் பணி

தொழிலதிபர் ரவி பிள்ளை குடும்பத்துடன் விக்கிரகத்தை சமர்ப்பிக்க கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்கு வந்திருந்தார். முதலில் பகவதி அம்மன் கோயில் மூலஸ்தானத்தில் வைத்து சிலையை காணிக்கையாக வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் கொலு மண்டபத்தில் கொண்டு செல்லப்பட்டு நகை சரிபார்ப்பு அதிகாரி செந்தில் குமார், தொழில் நுட்ப உதவியாளர் ராஜா ஆகியோர் நகையின் எடை மற்றும் அளவுகளை சரிபார்த்து பதிவு செய்தனர்.

பகவதி அம்மன் விக்கிரகம் காணிக்கை செலுத்திய தொழில் அதிபர்

பகவதி அம்மன் சிலையுடன் 3 கிலோ எடையில் வெள்ளியிலான ஆமை பீடத்தையும் ரவி பிள்ளை காணிக்கையாக வழங்கியுள்ளார். பகவதி அம்மன் விக்கிரகத்தை கேரள மாநிலம், வைக்கத்தைச் சேர்ந்த பொற்கொல்லர் கைலாஷ்  மற்றும் அவரது குழுவினர் தயாரித்துள்ளனர். பகவதி அம்மன் தங்க விக்கிரகத்தை திருவிழா காலங்களில் அம்மன் எழுந்தருளல் நிகழ்ச்சிகளின்போது பயன்படுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எல்லாப் பிணியும் நில்லாதோட... தோரணமலை தைப்பூசம்! விரும்பிய வாழ்க்கை உடனே அமைய சங்கல்பியுங்கள்!

எல்லாப் பிணியும் நில்லாதோட தோரணமலை தைப்பூசம்! விரும்பிய வாழ்க்கை உடனே அமைய சங்கல்பியுங்கள்! வரும் 2025 பிப்ரவரி 11-ம் நாள் செவ்வாய்க்கிழமை தைப்பூச நன்னாளில் இங்கு சிறப்பு வழிபாடுகள், சங்கல்ப பூஜைகள் ந... மேலும் பார்க்க

வாழ்த்துங்களேன்!

பிறந்த நாள், திருமண நாள், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம்... இவை போன்று இன்னும் பல்வேறு இனிய வைபவங்களைக் காணும் வாசகர்களுக்குச் சக்தி விகடனின் வாழ்த்துகள்! அன்பார்ந்த வாசகர்களே!உங்கள் சக்தி விகடன் 21-ம... மேலும் பார்க்க

800 ஆண்டுகள் பழமையான கோயிலில் தூய்மைப்பணி; 62 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய தெப்பக்குளம் | Photo Album

குளத்தில் நீர் நிரம்பியதுகதலி நரசிங்க பெருமாள் கோயில் தெப்பக்குளம்குளத்தில் நீர் நிரம்பியதுகுளத்தில் நீர் நிரம்பியதுகதலி நரசிங்க பெருமாள் கோயில் தெப்பக்குளம்கதலி நரசிங்க பெருமாள் கோயில் தெப்பக்குளம்கத... மேலும் பார்க்க

`பகை விலக்கி பலம் சேர்க்கும்' தைப்பூச மகாசங்கல்ப பூஜை தோரணமலையில் 7 அபூர்வ பலன்கள்; சங்கல்பியுங்கள்

பகை விலக்கி பலம் சேர்க்கும் தைப்பூச மகாசங்கல்ப பூஜை தோரணமலையில்! 7 அபூர்வ பலன்கள்! சங்கல்பியுங்கள்! வரும் 2025 பிப்ரவரி 11-ம் நாள் செவ்வாய்க்கிழமை தைப்பூச நன்னாளில் இங்கு சிறப்பு வழிபாடுகள், சங்கல்ப ப... மேலும் பார்க்க

திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகப் பணிகள்; பழமை மாறாமல் பொருத்தப்பட்ட 9 கலசங்கள்!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும், கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில். தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விடுமுறை மற்றும் விசேச நாள்களி... மேலும் பார்க்க

திருச்செந்தூர்: 2 மாதத்திற்குப் பிறகு ஆசி வழங்கிய தெய்வானை யானை… மகிழ்ச்சியில் பக்தர்கள்!

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும், கடற்கரை ஓரத் தலமுமானது திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விடுமுறை மற்றும் விசேஷ நா... மேலும் பார்க்க