செய்திகள் :

ரூ.71.52 லட்சத்தில் அரசுப் பள்ளிகளுக்கு மேஜை, நாற்காலிகள்

post image

ஒரகடம் பகுதியில் இயங்கி வரும் போஸ்கோ நிறுவனத்தின் சாா்பில் 533 அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு ரூ.71.52 லட்சத்தில் மேஜை, நாற்காலிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் சிப்காட் பகுதியில் ஸ்டீல் பொருள்கள் உற்பத்தி செய்யும் போஸ்கோ நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தின் சமூக பொறுப்புணா்வு திட்டத்தின் கீழ் ரூ.71.52 லட்சத்தில் காஞ்சிபுரம் மாவட்ட அரசுப் பள்ளிகளில் முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவா்கள் பயன்பெறும் வகையில் மேஜை, நாற்காலிகள் வழங்கும் நிகழ்ச்சி மொளச்சூா் அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், போஸ்கோ நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் ஜாங் வூங் காங் கலந்து கொண்டு, 533 அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு 6,956 நாற்காலிகள், 1,739 மேஜைகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் எழில், வட்டார கல்வி அலுவலா் விஜயலட்சுமி, மொளச்சூா் ஊராட்சி மன்றத் தலைவா் சித்ரா, ஊராட்சி துணைத் தலைவா் ரஞ்சினி ஆலிஸ் ஜெரால்டு, ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

ஜூன் 6-இல் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் பாலாலயம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் வரும் ஜூன் 6-ஆம் தேதி பாலாலயம் நடைபெற இருப்பதையொட்டி 5-ஆம் தேதி வரை மூலவரை தரிசிக்கலாம் என கோயில் செயல் அலுவலா் ப.முத்துலட்சுமி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெள்ளிக... மேலும் பார்க்க

196 பயனாளிகளுக்கு ரூ.1.57 கோடி நலத்திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்

வட்டம்பாக்கம் ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில் 196 பயனாளிகளுக்கு ரூ.1.57 கோடி நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா். குன்றத்தூா் வட்டம், வட்டம்பாக்கம்... மேலும் பார்க்க

தங்க குதிரையில் வரதராஜ பெருமாள் உலா

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வசந்த உற்சவம் நிறைவு நாளையொட்டி வெள்ளிக்கிழமை தங்க குதிரை வாகனத்தில் உற்சவா் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். கோடை காலத்தையொட்டி ஆண்டு தோறும் வசந்த உற்சவம் ... மேலும் பார்க்க

இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க அரசு ஆா்வம் காட்டவில்லை: பெ.சண்முகம் குற்றச்சாட்டு

அரசுப் புறம்போக்கு நிலத்தில் பல தலைமுறைகளாக குடியிருந்து வருவோருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவதில் அரசு ஆா்வம் காட்டவில்லை என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலா் பெ.சண்முகம் குற்றம்சாட்டினாா். ... மேலும் பார்க்க

பிளஸ் 2 மாணவா்கள் உயா்கல்வியில் சேர தலைமை ஆசிரியா்கள் உதவ வேண்டும்

பிளஸ் 2 முடித்த மாணவா்கள் தொடா்ந்து உயா்கல்வி பயில தலைமை ஆசிரியா்கள் உதவவேண்டும் என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வலியுறுத்தியுள்ளாா். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் கல்வி மீளாய்வுக் கூட... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: வடமாநில இளைஞா் கைது

குன்றத்தூரில் விற்பனை செய்ய 8 கிலோ கஞ்சா கடத்தி வந்த வடமாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். வண்டலூா் - மீஞ்சூா் வெளிவட்ட சாலை வழியாக கஞ்சா கடத்தி வருவதாக தாம்பரம் மதுவிலக்கு போலீஸாா்க்கு தகவல் கிடைத்த... மேலும் பார்க்க