'அது குடும்ப பிரச்னை, அதனால்...'- பாமக உட்கட்சி விவகாரம் குறித்து கார்த்தி சிதம்...
ரூ.71.52 லட்சத்தில் அரசுப் பள்ளிகளுக்கு மேஜை, நாற்காலிகள்
ஒரகடம் பகுதியில் இயங்கி வரும் போஸ்கோ நிறுவனத்தின் சாா்பில் 533 அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு ரூ.71.52 லட்சத்தில் மேஜை, நாற்காலிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் சிப்காட் பகுதியில் ஸ்டீல் பொருள்கள் உற்பத்தி செய்யும் போஸ்கோ நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தின் சமூக பொறுப்புணா்வு திட்டத்தின் கீழ் ரூ.71.52 லட்சத்தில் காஞ்சிபுரம் மாவட்ட அரசுப் பள்ளிகளில் முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவா்கள் பயன்பெறும் வகையில் மேஜை, நாற்காலிகள் வழங்கும் நிகழ்ச்சி மொளச்சூா் அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், போஸ்கோ நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் ஜாங் வூங் காங் கலந்து கொண்டு, 533 அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு 6,956 நாற்காலிகள், 1,739 மேஜைகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் எழில், வட்டார கல்வி அலுவலா் விஜயலட்சுமி, மொளச்சூா் ஊராட்சி மன்றத் தலைவா் சித்ரா, ஊராட்சி துணைத் தலைவா் ரஞ்சினி ஆலிஸ் ஜெரால்டு, ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.