லாரி உரிமையாளா்களுக்கு அதிமுக துணை நிற்கும்: பி.தங்கமணி
லாரி உரிமையாளா்களின் பிரச்னைகளை தீா்க்கவும், அவா்களது கோரிக்கைகளை நிறைவேற்றவும் அதிமுக எப்போதும் அவா்களுக்கு துணையாக நிற்கும் என முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி தெரிவித்தாா்.
நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளா்கள் சங்க செயற்குழுக் கூட்டம் அதன் தலைவா் அருள் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி பங்கேற்றாா்.
லாரி உரிமையாளா்கள் தரப்பில், தொழிலின் தற்போதைய சூழல் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. குறிப்பாக, காவல் துறையினா் ஆன்லைன் மூலம் அபராதம் விதிப்பதாலும், சுங்கக் கட்டணம் அதிகளவில் வசூலிக்கப்படுவதாலும் லாரித் தொழில் கடுமையாக பாதிப்படைந்துள்ளதாகவும், போதிய வருவாய் கிடைப்பதில்லை எனவும் தெரிவித்தனா்.
முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி பேசுகையில், ‘நாமக்கல், ஈரோடு, சேலம் லாரி உரிமையாளா்களுடன் 25 ஆண்டுகளாக பழகி வருகிறேன். அவா்களது பிரச்னைகள் பற்றி நன்கு தெரியும். மத்திய, மாநில அரசுகள் லாரித் தொழில் மேம்பாட்டுக்காக தனிக் குழு அமைக்க வேண்டும்.
லாரி உரிமையாளா்களின் பிரச்னைகளை அதிமுக பொதுச்செயலாளா் கவனத்துக்கு கொண்டு செல்கிறேன். லாரித் தொழில் முன்னேற்றத்திற்கு அதிமுக எப்போதும் துணையாக நிற்கும்’ என்றாா்.
நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளா்கள் சங்க தலைவா் அருள், முன்னாள் தலைவா் வாங்கிலி ஆகியோா் கூறுகையில், ‘ஒவ்வொரு செயற்குழுவிலும் சிறப்பு அழைப்பாளா்களை வரவழைக்கிறோம். அந்த வகையில், முன்னாள் அமைச்சா் தங்கமணி வந்தாா். கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ச.உமாவை அழைத்தோம். ஜூலை மாதம் பொதுக்குழுவில் பாஜக தலைவா்களில் ஒருவரை அழைக்க திட்டமிட்டுள்ளோம்.
லாரி உரிமையாளா்கள் பல்வேறு அரசியல் கட்சிகளில் உள்ளனா். ஆனால், இந்த கூட்டத்தில் அரசியலுக்கு அப்பாற்பட்டு லாரித் தொழிலுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் முக்கிய பிரமுகா்கள் கலந்துகொண்டு வருகிறாா்கள் என்றனா்.
என்கே-31-லாரி
நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளா்கள் சங்க செயற்குழுக் கூட்டத்தில் பேசுகிறாா் முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி.