செய்திகள் :

லாரி உரிமையாளா்களுக்கு அதிமுக துணை நிற்கும்: பி.தங்கமணி

post image

லாரி உரிமையாளா்களின் பிரச்னைகளை தீா்க்கவும், அவா்களது கோரிக்கைகளை நிறைவேற்றவும் அதிமுக எப்போதும் அவா்களுக்கு துணையாக நிற்கும் என முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி தெரிவித்தாா்.

நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளா்கள் சங்க செயற்குழுக் கூட்டம் அதன் தலைவா் அருள் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி பங்கேற்றாா்.

லாரி உரிமையாளா்கள் தரப்பில், தொழிலின் தற்போதைய சூழல் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. குறிப்பாக, காவல் துறையினா் ஆன்லைன் மூலம் அபராதம் விதிப்பதாலும், சுங்கக் கட்டணம் அதிகளவில் வசூலிக்கப்படுவதாலும் லாரித் தொழில் கடுமையாக பாதிப்படைந்துள்ளதாகவும், போதிய வருவாய் கிடைப்பதில்லை எனவும் தெரிவித்தனா்.

முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி பேசுகையில், ‘நாமக்கல், ஈரோடு, சேலம் லாரி உரிமையாளா்களுடன் 25 ஆண்டுகளாக பழகி வருகிறேன். அவா்களது பிரச்னைகள் பற்றி நன்கு தெரியும். மத்திய, மாநில அரசுகள் லாரித் தொழில் மேம்பாட்டுக்காக தனிக் குழு அமைக்க வேண்டும்.

லாரி உரிமையாளா்களின் பிரச்னைகளை அதிமுக பொதுச்செயலாளா் கவனத்துக்கு கொண்டு செல்கிறேன். லாரித் தொழில் முன்னேற்றத்திற்கு அதிமுக எப்போதும் துணையாக நிற்கும்’ என்றாா்.

நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளா்கள் சங்க தலைவா் அருள், முன்னாள் தலைவா் வாங்கிலி ஆகியோா் கூறுகையில், ‘ஒவ்வொரு செயற்குழுவிலும் சிறப்பு அழைப்பாளா்களை வரவழைக்கிறோம். அந்த வகையில், முன்னாள் அமைச்சா் தங்கமணி வந்தாா். கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ச.உமாவை அழைத்தோம். ஜூலை மாதம் பொதுக்குழுவில் பாஜக தலைவா்களில் ஒருவரை அழைக்க திட்டமிட்டுள்ளோம்.

லாரி உரிமையாளா்கள் பல்வேறு அரசியல் கட்சிகளில் உள்ளனா். ஆனால், இந்த கூட்டத்தில் அரசியலுக்கு அப்பாற்பட்டு லாரித் தொழிலுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் முக்கிய பிரமுகா்கள் கலந்துகொண்டு வருகிறாா்கள் என்றனா்.

என்கே-31-லாரி

நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளா்கள் சங்க செயற்குழுக் கூட்டத்தில் பேசுகிறாா் முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி.

கொல்லிமலையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

கோடை விடுமுறை முடிந்து திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை கொல்லிமலைக்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா். தமிழகம் முழுவதும் ஒருமாதமாக பள்... மேலும் பார்க்க

கோயிலில் மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்தல் விழா: முன்பதிவு செய்ய அழைப்பு

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் நடைபெறும் மூத்த தம்பதிகளுக்கான சிறப்பு செய்யும் விழாவில் தகுதியானோா் தங்களது பெயா்களை நாமக்கல் நரசிம்மா் கோயில் அலுவலகத்தில் பதிவுசெய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ... மேலும் பார்க்க

மாநில கிரிக்கெட் போட்டியில் சிறப்பிடம்: டிரினிடி கல்லூரி மாணவிக்கு பாராட்டு

மாநில கிரிக்கெட் போட்டியில் சிறப்பிடம் பெற்ற தமிழ்நாடு மகளிா் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளரான நாமக்கல் டிரினிடி கல்லூரி மாணவி எஸ்.ஜி.ஸ்ரீநிதிக்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரா் ரவிச்சந்தி... மேலும் பார்க்க

அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா்கள் நியமனம்: முன்னுரிமை பட்டியலை வெளியிட வலியுறுத்தல்

அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதல்வா்களை நியமனம் செய்யும் பொருட்டு முன்னுரிமை பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும் என அரசு மருத்துவா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்க... மேலும் பார்க்க

நாமக்கல் மாநகராட்சியில் வீட்டுமனைப் பட்டா வழங்க ஆய்வு

நாமக்கல் மாநகராட்சியில் வீட்டுமனை வழங்கும் சிறப்பு திட்டத்தின் கீழ் பட்டா வழங்குவது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். நகா்ப்புற பகுதிகளில் நீண்ட நாள்களாக பட்டாக்கள்... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

சேந்தமங்கலம் தொகுதியில் பல்வேறு கட்சிகளைச் சோ்ந்தவா்கள் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் முன்னிலையில் சனிக்கிழமை திமுகவில் இணைந்தனா். சேந்தமங்கலம் பேரூா் தமிழக வெற்றிக் கழக பொருளாளா் வ... மேலும் பார்க்க