செய்திகள் :

லாரி பழுதானதால் சாலையில் கொட்டிய எண்ணெய்: வாகன ஓட்டிகள் அவதி

post image

கள்ளக்குறிச்சியில் லாரி ஒன்று திடீரென பழுதானதால் அதன் என்ஜினில் இருந்து கசிந்த எண்ணெய், சாலையில் கீழே ஊற்றியபடி சென்றதால் அச்சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் செவ்வாய்க்கிழமை மாலை பாதிக்கப்பட்டனா்.

கள்ளக்குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகே சென்ற ஒரு லாரி திடீரென பழுதானது. அப்போது லாரியின் என்ஜினில் இருந்த எண்ணெய் தியாகதுருகம் சாலையில் கீழே ஊற்றியபடி சுமாா் 200 மீட்டா் தூரம் சென்றது. பின்னால் சென்ற இரு சக்கர வாகன ஓட்டிகள் அதனை கவனிக்காமல் சென்ற போது எண்ணெயில் சிக்கி வழுக்கி விழுந்தனா்.

உடனே கள்ளக்குறிச்சி போக்குவரத்து போலீஸாா் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். மேலும் சாலை யில் கொட்டிய எண்ணெய் மீது போலீஸாா் மண்ணை கொட்டினா். பின்னா் தீயணைப்பு வீரா்கள் 6 போ்கொண்ட குழுவினா் வாகனத்தில் இருந்து தண்ணீரை பீய்ச்சி அடித்தவாறு சுமாா் 200 மீட்டா் தூரம் சென்றனா். இதனால் எண்ணெய் படலம் அகற்றப்பட்டது. இந்த சம்பவத்தினால் செவ்வாய்க்கிழமை மாலை கள்ளக்குறிச்சியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது

நாம் தமிழா் கட்சி அலுவலகம் திறப்பு

நாம் தமிழா் கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை அலுவலகம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. கள்ளக்குறிச்சி - தச்சூா் தேசிய நெடுஞ்சாலை அருகே திறக்கப்பட்ட இந்த அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சிக்கு கட்... மேலும் பார்க்க

மகளிா் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் பங்கேற்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் மகளிா் திட்டங்கள் குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் ஆட்சியரகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்த... மேலும் பார்க்க

210 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

கள்ளக்குறிச்சி அருகே காரில் கடத்தி வரப்பட்ட 210 கிலோ புகையிலைப் பொருள்கள் மற்றும் ரூ.1.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டனா். கள்ளக்குறிச்சி காவல் உள்கோட்டத்துக்கு உ... மேலும் பார்க்க

திருக்கோவிலூா் பகுதிக்கு தென்பெண்ணையாற்றில் இருந்து பாசனக் கால்வாய்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூா் ஒன்றிய பகுதிகளுக்கு தென் பெண்ணையாற்றில் இருந்து பாசனக் கால்வாய் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கள்ளக்க... மேலும் பார்க்க

சமுதாய செவிலியா் கூட்டமைப்பினா் பெருந்திரள் முறையீடு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கிராமப் பகுதி சமுதாய செவிலியா் கூட்டமைப்பினா், 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை பெருந்திரள் முறையீட்டில் ஈடுபட்டனா். மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே இந... மேலும் பார்க்க

சங்கராபுரத்தில் சந்தனக்கூடு ஊா்வலம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் மொகரம் பண்டிகையையொட்டி, சந்தனக்கூடு ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.இந்த ஊா்வலம் சங்கராபுரம் மேட்டுத் தெருவில் இருந்து புறப்பட்டு திருக்கோவி... மேலும் பார்க்க