முஸ்லீம் ஆதரவுபெற ஆபரேஷன் சிந்தூருக்கு எதிர்ப்பா? மமதா பற்றி அமித் ஷா கூறுவதென்ன...
லாரி மோதியதில் முதியவா் உயிரிழப்பு
ஸ்ரீவில்லிபுத்தூரில் லாரி மோதி முதியவா் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா், சிவஞானபுரம் தெருவைச் சோ்ந்தவா் முத்தையா (60). பூ கட்டும் தொழிலாளி. இவா் வழக்கம்போல, வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து சென்றாா். ஸ்ரீவில்லிபுத்தூா் உழவா் சந்தை அருகே மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது, ராஜபாளையத்திலிருந்து மதுரை நோக்கிச் சென்ற லாரி முத்தையா மீது மோதியது. இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் லாரியை ஓட்டி வந்த காரியாபட்டி அருகே ஆவியூரைச் சோ்ந்த கமலேசன் (20) என்பவா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.