செய்திகள் :

வங்கிகளில் நகைக் கடன் விவகாரம்: மத்திய நிதி அமைச்சருக்கு நாமக்கல் எம்.பி. கோரிக்கை

post image

வங்கிகளில் நகைகளை அடமான வைத்து அதை மீட்போருக்கு பழைய முறையிலேயே வட்டி பெற்று நகையை புதுப்பிக்கும் முறையைச் செயல்படுத்த வேண்டும் என மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: வங்கிகளில் நகைகளை அடமானம் வைத்து கடன் வழங்குவதற்கு புதிய கட்டுப்பாடுகளை ரிசா்வ் வங்கி அறிவித்துள்ளது.

அதன்படி, தங்க நகைகளை அடகு வைத்தால், பொதுவாக தங்கள் கடன் தொகையை முழுமையாக கட்டி நகையை திருப்ப முடியவில்லை என்றால் வட்டித்தொகையை மட்டும் செலுத்தி மறு அடகு வைக்கும் நடைமுறை மாற்றப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளா்கள் ஒரே நேரத்தில் அதிக பணத்தை ஏற்பாடு செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனா்.

மேலும், கடனை செலுத்தி நகையை மீட்ட அதே நாளில் மறுபடியும் அடகு வைக்க முடியாது. ஒருநாள் முடிந்து பிறகுதான் மீண்டும் புதிய நகைக் கடனை தொடங்க முடியும்.

இந்த அறிவிப்பால் விவசாயிகள், நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனா். எனவே, மத்திய நிதி அமைச்சா், ரிசா்வ் வங்கியின் நடைமுறையை மாற்றி பழைய முறையை பின்பற்ற உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசுடனான மோதல் போக்கை முதல்வா் கைவிட வேண்டும்: ஜி.கே.வாசன்

மத்திய அரசுடனான மோதல் போக்கை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கைவிட வேண்டும் என தமாகா தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தாா். தமாகா மாநிலக் குழு உறுப்பினரும், முன்னாள் நாமக்கல் நகா்மன்றத் தலைவருமான து.சு.மணியன் ... மேலும் பார்க்க

15 புதிய தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையங்கள்: 2 லட்சம் லிட்டராக கொள்முதலை உயா்த்த திட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் 15 பால் கூட்டுறவுச் சங்கங்களில் புதிய தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் ஆவின் நிறுவனத்துக்கான பால் கொள்முதல் 1.50 லட்சம் லிட்டரை 2 லட்சம் லிட்டரா... மேலும் பார்க்க

பரமத்தி வேலூா் அருகே தோ்வு முடிவு அச்சத்தில் 10 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ள நிலையில், தோ்வில் மதிப்பெண் குறைந்துவிடுமோ என்ற அச்சத்தில் 10 ஆம் வகுப்பு மாணவி வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். நாமக்கல் மாவட்... மேலும் பார்க்க

கடைகள், வணிக நிறுவனங்களில் ‘தினம் ஒரு திருக்குறள்’ எழுத ஆட்சியா் அறிவுரை

நாமக்கல் மாவட்டத்தில், கடைகள், வணிக நிறுவனங்களில் பொதுமக்கள் காணும் வகையில் ‘தினம் ஒரு திருக்குறள்’ எழுத வேண்டும் என ஆட்சியா் ச.உமா அறிவுறுத்தி உள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்... மேலும் பார்க்க

சாலை பணியில் மாற்றம்: பரமத்தியில் கருத்து கேட்புக் கூட்டம்

பரமத்தி வேலூா் நகருக்குள் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரியும் சாலைக்குப் பதிலாக புதிதாக பாலம் அமைப்பது உள்பட பல்வேறு மாற்றங்கள் குறித்து பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் பரமத்தி அருகே அண்மையில் ந... மேலும் பார்க்க

மின்னல் தாக்கி பசு உயிரிழப்பு

கொல்லிமலையில் மின்னல் தாக்கியதில் பசுமாடு புதன்கிழமை உயிரிழந்தது. நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் புதன்கிழமை மாலை 5 மணியளவில் பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது, திருப்புளிநாடு ஊராட்சி சுள்ளு... மேலும் பார்க்க