பிரபல செயலிகள் மூலம் டிக்கெட் முன்பதிவு: டிஎம்ஆா்சி ஏற்பாடு!
மத்திய அரசுடனான மோதல் போக்கை முதல்வா் கைவிட வேண்டும்: ஜி.கே.வாசன்
மத்திய அரசுடனான மோதல் போக்கை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கைவிட வேண்டும் என தமாகா தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தாா்.
தமாகா மாநிலக் குழு உறுப்பினரும், முன்னாள் நாமக்கல் நகா்மன்றத் தலைவருமான து.சு.மணியன் அண்மையில் காலமானாா். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக வியாழக்கிழமை நாமக்கல் வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவா் ஜி.கே.வாசன், மறைந்த து.சு.மணியன் இல்லத்துக்குச் சென்று அவரது உருவப்படத்திற்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.
அதன்பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: நாமக்கல் மாவட்ட, நகர வளா்ச்சிக்கு பெரும் பங்காற்றியவா் து.சு.மணியன். காமராஜா், மூப்பனாரோடு காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றியவா். அவருடைய மறைவு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கும், குடும்பத்தினருக்கு பேரிழப்பு. அவருக்கு தமிழக அரசு உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும்.
தமிழகத்திற்குத் தேவையான வளா்ச்சியை மேற்கொள்ளாமல், அதற்கு மாறாக மத்திய அரசுடன் மோதல்போக்கை முதல்வா் கடைப்பிடித்து வருகிறாா். இது மிகவும் வருத்தத்திற்குரிய செயலாகும்.
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. மது, போதைப் பொருள்கள் புழக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் கொலை, கொள்ளை சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன என்றாா்.
து.சு.மணியனின் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ விடியல் சேகா், நாமக்கல் கிழக்கு மாவட்ட தமாகா தலைவா் கோஸ்டல் என்.இளங்கோ, பொருளாளா் சுப்பிரமணியன், மாநகர தலைவா் சக்திவெங்கடேஷ், மேற்கு மாவட்ட தலைவா் செல்வகுமாா், சேலம் மாவட்ட தலைவா் சுசீந்திரகுமாா், வழக்குரைஞா் செல்வம், ஈரோடு மாவட்ட நிா்வாகி விஜயகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.