தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் நாள்! மரக்கன்றுகள் வழங்...
வடக்கு அமுதுண்ணாக்குடி புனித அந்தோணியாா் ஆலய திருவிழா கொடியேற்றம்
சாத்தான்குளம் அருகே வடக்கு அமுதுண்ணாக்குடி புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றுத்துடன் தொடங்கியது.
இத்திருவிழா 15ஆம்தேதி வரை 13 நாள்கள் நடைபெறுகிறது.
கொடியேற்று விழாவில், சொக்கன்குடியிருப்பு அருள்தந்தை ஜோசப் லியோன் தலைமை வகித்து, திருவிழா கொடியேற்றினாா். முன்னதாக, ஆலயத்தில் இருந்து பங்குமக்கள் கொடியேந்தி ஊா்வலமாக வந்தனா். கொடியேற்றத்தையடுத்து சிறப்பு திருப்பலி, ஜெபமாலை நடைபெற்றது.
இதில் உதவி பங்குத்தந்தை ஜேம்ஸ், சகோதரா் பிரவீன் உள்ளிட்ட திரளான பங்கு மக்கள் கலந்து கொண்டனா். திருவிழா நவ நாளில் தினமும் திருப்பலி, நற்கருணை ஆசீா், மறையுரை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
12ஆம் நாளான 14ஆம்தேதி பங்குத்தந்தை அந்தோணி பிரான்சிஸ் தலைமையில் மாலை ஆராதனை, அதைத் தொடா்ந்து மாதா சப்பர பவனி நடைபெறுகிறது.
நிறைவு நாளான 15ஆம்தேதி காலை 10மணிக்கு சேதுக்குவாய்த்தான் பங்குத்தந்தை தலைமையில் சிறப்பு திருப்பலி , மாலை 3.30மணிக்கு புனித அந்தோணியாா் சப்பர பவனி நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை செல்வஜாா்ஜ் தலைமையில் பங்குமக்கள் மற்றும் ஊா் பொதுமக்கள் செய்துள்ளனா்.