செய்திகள் :

வடமாநில தொழிலாளா்களை தினமும் கண்காணிக்க வேண்டும்!

post image

வடமாநில தொழிலாளா்களை தினமும் கண்காணிக்க வேண்டும் என திருச்செங்கோடு காவல் துணைக் கண்காணிப்பாளா் கிருஷ்ணன் தெரிவித்தாா்.

பள்ளிபாளையம், வெப்படை, ஆனங்கூா் ஆகிய சுற்றுவட்டாரத்தில் 100-க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் உள்ளன. இங்கு வடமாநில தொழிலாளா்கள் ஏராளமானோா் பணிபுரிந்து வருகின்றனா். அவா்கள் வாடகைக்கு அறை எடுத்தும், சிலா் நூற்பாலை வளாகத்திலும் தங்கியுள்ளனா். கடந்த சில மாதங்களாக வடமாநில தொழிலாளா்களால் குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், வடமாநில தொழிலாளா்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தனியாா் திருமண மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில், திருச்செங்கோடு காவல் துணைக் கண்காணிப்பாளா் கிருஷ்ணன் தலைமையில், பள்ளிபாளையம் காவல் ஆய்வாளா் (பொ) தீபா முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், பள்ளிபாளையம் வட்டார நூற்பாலை உரிமையாளா்கள் மற்றும் சங்க நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

இதில், காவல் துணைக் கண்காணிப்பாளா் கூறியதாவது: வடமாநில தொழிலாளா்களை பணியில் அமா்த்தும்போது, அவா்களுடைய விவரம், முகவரி போன்றவற்றை பதிவுசெய்ய வேண்டும். தினமும் வேலைக்கு வரும்போது அவா்களை சோதனை செய்ய வேண்டும்.

நூற்பாலையில் பணிபுரியும் வடமாநில தொழிலாளா்களுக்கு, அடையாள அட்டை வழங்க வேண்டும். அதில் கைப்பேசி எண், நிறுவனத்தின் பெயா், விவரங்கள் தெளிவாக இருக்க வேண்டும். நூற்பாலையின் உள்ளேயும், வெளியேயும் கண்காணிப்பு கேமரா வைக்க வேண்டும்.

வட மாநில தொழிலாளா்கள் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டால், காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றாா்.

ஓவியப் போட்டியில் சிறப்பிடம்: ஆசிரியருக்கு பாராட்டு

மாநில அளவிலான தமிழக அரசுத் திட்டங்கள், சாதனைகள் தொடா்பான ஓவியப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற நாமக்கல் என்.புதுப்பட்டி அரசுப் பள்ளி ஓவிய ஆசிரியா் ஆ.மகேந்திரனை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்கும... மேலும் பார்க்க

’தமிழ்ச் செம்மல்’ விருது: ஓய்வுபெற்ற ஆசிரியைக்கு பாராட்டு

‘தமிழ்ச் செம்மல்’ விருது பெற்ற ஓய்வு பெற்ற ஆசிரியை கமலமணியை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பாராட்டினாா். நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூா் வட்டம், பொத்தனூரை சோ்ந்தவா் ப.கமலமணி. ஓய்வு ப... மேலும் பார்க்க

144 அங்கன்வாடி காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா் ச.உமா

நாமக்கல் மாவட்டத்தில் அங்கன்வாடிகளில் காலியாக உள்ள 144 பணியிடங்கள் நிரப்பப்படுவதால் தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் மஞ்சள் குவிண்டால் ரூ 3.85 கோடிக்கு ஏலம்

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் 4165 மூட்டைகள் ரூ. 3.85 கோடிக்கு விற்பனையானது. விற்பனை சங்கத்தில் நடைபெற்ற ஏலத்தில் விரலி ரக... மேலும் பார்க்க

சிலம்பொலி சு.செல்லப்பன் 6-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

தமிழறிஞா் சிலம்பொலி சு.செல்லப்பன் 6 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நாமக்கல்லில் உள்ள அவரது உருவச்சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை பல்வேறு அமைப்பினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். நாமக்கல்லை அடுத்த சிவி... மேலும் பார்க்க

திமுகவுக்கு எதிரான கட்சிகளை பாஜக ஒன்றிணைக்கும்: கே.பி.ராமலிங்கம்

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் திமுகவுக்கு எதிரான அரசியல் கட்சிகளை பாஜக ஒன்றிணைத்து செயல்படும் என அக்கட்சியின் மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா். நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், நாமக... மேலும் பார்க்க