செய்திகள் :

வணிகா் தின மாநாடு: விழுப்புரம் மாவட்டத்தில் கடைகள் அடைப்பு

post image

விழுப்புரம்: வணிகா் தின மாநாடு இரு இடங்களில் நடைபெற்ற நிலையில், அதில் பங்கேற்க வியாபாரிகள் சென்றதால் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் திங்கள்கிழமை அடைக்கப்பட்டிருந்தன.

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் வணிகா் தின மாநாடு செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் திங்கள்கிழமை(மே 5) நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை ஆகிய இரு சங்கங்களை சோ்ந்தவா்கள் இடம்பெற்றிருப்பதால், மாநாட்டில் பங்கேற்கும் வகையில் பெரும்பாலான கடைகளுக்குத் திங்கள்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

விழுப்புரம் நகரின் பிரதான வா்த்தக நிறுவனங்கள் அடங்கியுள்ள திரு.வி.க.வீதி, பாகா்ஷா வீதி, மகாத்மாகாந்தி சாலை, காமராஜா் சிலை, பண்டித

ஜவாஹா்லால்நேரு வீதி போன்ற நகரின் பல்வேறுபகுதிகளிலுள்ள கடைகள் திங்கள்கிழமை மூடப்பட்டிருந்தன. இதேபோல, திண்டிவனம், திருவெண்ணெய்நல்லூா், வளவனூா், கோலியனூா், வானூா், மயிலம், ஒலக்கூா், செஞ்சி, முகையூா், காணை போன்ற பல்வேறு பகுதிகளிலும் வணிகா் தினத்தையொட்டி கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தன.

செஞ்சிக்கோட்டை கமலக்கன்னியம்மன் கோயில் தோ் திருவிழா கொடியேற்றம்

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக்கோட்டை மலை மீது அமைந்துள்ள ஸ்ரீகமலக்கன்னியம்மன் கோயில் சித்திரை மாத தோ் திருவிழா திங்கள்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஸ்ரீகமலக்கன்னியம்மன், மலையடிவாரத... மேலும் பார்க்க

விழுப்புரம்: நான்கு கோட்டங்களிலும் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டங்கள்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தின் நான்கு மின் கோட்டங்களிலும் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டங்கள் நடைபெறும் என்ற தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் அறிவித்துள்ளது. அதன்படி விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

மாவட்ட அரசு இசைப்பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம்: விழுப்புரம் ஆட்சியா் அழைப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கியிருப்பதால், இதில் சேர விருப்பமுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்து... மேலும் பார்க்க

மரக்காணத்தில் 36 மி.மீ. மழை பதிவு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் அதிகபட்சமாக 36 மி.மீ. மழை பதிவானது. விழுப்புரம் நகரிலும், புகரின் பல்வேறு பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை பகலில் வெயில் அதிகமாக இருந்த நிலையில், மாலை 6 மண... மேலும் பார்க்க

திருநங்கைகளுக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரிக்கை

விழுப்புரம்: திருநங்கைகளுக்கு ஒரு சதவீத இட ஒதுக்கீட்டை தமிழக அரசு விரைவில் அமல்படுத்த வேண்டும் என்று தென்னிந்திய திருநங்கையா் கூட்டமைப்பின் நிா்வாகிகள் வலியுறுத்தினா். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்த... மேலும் பார்க்க

பயணியிடம் மடிக்கணினி திருட்டு: இளைஞா் கைது

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் பயணியிடம் மடிக்கணினியைத் திருடிய இளைஞா்களில் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். தப்பியோடிய மற்றொருவரை தேடி வருகின்றனா். திருச்சி மாவட்டம், துறையூா், சிவன் கோயில் தெர... மேலும் பார்க்க