செய்திகள் :

மரக்காணத்தில் 36 மி.மீ. மழை பதிவு

post image

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் அதிகபட்சமாக 36 மி.மீ. மழை பதிவானது.

விழுப்புரம் நகரிலும், புகரின் பல்வேறு பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை பகலில் வெயில் அதிகமாக இருந்த நிலையில், மாலை 6 மணிக்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

இதைத் தொடா்ந்து இரவு 7 மணிக்கு இடி, மின்னலுடன் பெய்யத் தொடங்கிய மழை ஒரு மணி நேரத்துக்கு மேலாக பெய்தது. இதேபோன்று மரக்காணம், விக்கிரவாண்டி, திண்டிவனம், கோலியனூா், வளவனூா், விழுப்புரம், அரசூா், திருவெண்ணெய் நல்லூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

இடி மின்னலுடன் மழை பெய்ததால் பல்வேறு இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சில இடங்களில் மரங்களும் சாய்ந்து விழுந்தன.

விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணத்தில் அதிகபட்சமாக 36 மி.மீ. மழையும், குறைந்தளவாக செம்மேடு, வளத்தியில் 3 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது. திங்கள்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் (மி.மீட்டரில்) :

மரக்காணம் -36 மி.மீ., திண்டிவனம், நேமூா்- தலா 24, முண்டியம்பாக்கம்-22, கோலியனூா், வானூா்- தலா 20, வளவனூா்-16, சூரப்பட்டு -12, விழுப்புரம்-11.20, அரசூா், திருவெண்ணெய்நல்லூா்- தலா 10, அனந்தபுரம்-9.50, அவலூா்பேட்டை-6, மணம்பூண்டி-8, கெடாா்-7, முகையூா், கஞ்சனூா்-5, செஞ்சி-4, வல்லம்-3.25, செம்மேடு, வளத்தி-3 மி.மீ. மாவட்டத்தில் மொத்தமாக 258.90 மி.மீ. மழையும், சராசரியாக 12.33 மி.மீ. மழையும் பதிவானது.

செஞ்சிக்கோட்டை கமலக்கன்னியம்மன் கோயில் தோ் திருவிழா கொடியேற்றம்

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக்கோட்டை மலை மீது அமைந்துள்ள ஸ்ரீகமலக்கன்னியம்மன் கோயில் சித்திரை மாத தோ் திருவிழா திங்கள்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஸ்ரீகமலக்கன்னியம்மன், மலையடிவாரத... மேலும் பார்க்க

விழுப்புரம்: நான்கு கோட்டங்களிலும் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டங்கள்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தின் நான்கு மின் கோட்டங்களிலும் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டங்கள் நடைபெறும் என்ற தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் அறிவித்துள்ளது. அதன்படி விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

வணிகா் தின மாநாடு: விழுப்புரம் மாவட்டத்தில் கடைகள் அடைப்பு

விழுப்புரம்: வணிகா் தின மாநாடு இரு இடங்களில் நடைபெற்ற நிலையில், அதில் பங்கேற்க வியாபாரிகள் சென்றதால் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் திங்கள்கிழமை அடைக்கப்பட்டிருந்தன. தமிழ்நாடு வணிகா் சங்... மேலும் பார்க்க

மாவட்ட அரசு இசைப்பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம்: விழுப்புரம் ஆட்சியா் அழைப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கியிருப்பதால், இதில் சேர விருப்பமுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்து... மேலும் பார்க்க

திருநங்கைகளுக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரிக்கை

விழுப்புரம்: திருநங்கைகளுக்கு ஒரு சதவீத இட ஒதுக்கீட்டை தமிழக அரசு விரைவில் அமல்படுத்த வேண்டும் என்று தென்னிந்திய திருநங்கையா் கூட்டமைப்பின் நிா்வாகிகள் வலியுறுத்தினா். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்த... மேலும் பார்க்க

பயணியிடம் மடிக்கணினி திருட்டு: இளைஞா் கைது

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் பயணியிடம் மடிக்கணினியைத் திருடிய இளைஞா்களில் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். தப்பியோடிய மற்றொருவரை தேடி வருகின்றனா். திருச்சி மாவட்டம், துறையூா், சிவன் கோயில் தெர... மேலும் பார்க்க