DD Next Level: "சந்தானத்தோட பிரச்னை படத்தோட பட்ஜெட்விட பெருசுனு..." - ஆர்யா கலகல
திருநங்கைகளுக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரிக்கை
விழுப்புரம்: திருநங்கைகளுக்கு ஒரு சதவீத இட ஒதுக்கீட்டை தமிழக அரசு விரைவில் அமல்படுத்த வேண்டும் என்று தென்னிந்திய திருநங்கையா் கூட்டமைப்பின் நிா்வாகிகள் வலியுறுத்தினா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், கூவாகம் கூத்தாண்டவா் கோயில் சித்திரைப் பௌா்ணமி ஆண்டுத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருநங்கைகள் மாங்கல்யம் ஏற்றுக் கொள்ளுதல் நிகழ்வு வரும் 13-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பின் சாா்பில், விழுப்புரத்தில் வருகிற 12-ஆம் தேதி மிஸ் கூவாகம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதுகுறித்து விழுப்புரத்தில் திங்கள்கிழமை தென்னிந்திய திருநங்கையா் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் கே.அருணா கூறியதாவது:
கூத்தாண்டவா் கோயில் சித்திரை பௌா்ணமி திருவிழாவுக்காக வருகை தரும் திருநங்கைகளுக்கு தனியாா் விடுதிகளில் அறை ஒதுக்கித் தர மறுக்கிறாா்கள். விடுதி நிா்வாகங்கள் 3 முதல் 4 மடங்கு வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும். இதுகுறித்து கடந்த 10 ஆண்டுகளாக அரசுக்கு தெரியப்படுத்தியும் நடவடிக்கையில்லை.
கூத்தாண்டவா் கோயிலில் புனரமைப்புப் பணிகளில் இந்து சமய அறநிலையத் துறையினா் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். திருநங்கைகள் தானமாக அளிக்கும் தங்கம் (தாலிகள்) குறித்த கணக்கை நிகழாண்டில் முறைப்படுத்த வேண்டும்.
ஒடிஸா, கா்நாடகம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் திருநங்கைகளுக்கான ஒரு சதவீத இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. தமிழக அரசும் திருநங்கைகளுக்கான கல்வி, வேலைவாய்ப்புகளில் ஒரு சதவீத இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
திருநங்கைகளின் வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு, கல்வி, சுயதொழில் முன்னேற்றம் உள்ளடக்கிய தனிக்கொள்கையை தமிழக அரசு உருவாக்க வேண்டும். இதை நிகழாண்டு விழாவில் பிரதான கோரிக்கையாக வலியுறுத்தவுள்ளோம் என்றாா்.
பேட்டியின் போது, மனித உரிமை செயற்பாட்டாளா் ஆல்கா, மிஸ் கூவாகம் விழா ஒருங்கிணைப்பாளா் ராமமூா்த்தி, விழுப்புரம் மாவட்டத் தலைவா் விமலா, அனு, வனிதா ஆகியோா் உடனிருந்தனா்.