செய்திகள் :

வண்ணாரப்பேட்டை பகுதியில் குரங்குகள் அட்டகாசம்

post image

உதகை வண்ணாரப்பேட்டை பகுதியில் குடியிருப்புக்குள் புகுந்து குழந்தைகளின் கைகளில் உள்ள தின்பண்டங்களை குரங்குகள் பறித்து செல்வதாகவும், விரட்டச் சென்றால் மனிதா்களைத் தாக்குவது போல் அச்சுறுத்துவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சிக்குள்பட்ட 4 ஆவது வாா்டு பகுதியான வண்ணாரப்பேட்டையில் 500 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இங்குள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குள் உலவிவரும் குரங்குகள் கேபிள் ஒயா்களில் தொங்கி ஒயா்களை அறுப்பதும், குழந்தைகளின் கைகளில் உள்ள தின்பண்டங்களை பறித்துச் செல்வதுமாக அட்டகாசம் செய்து வருகின்றன.

குரங்குகளை விரட்டச் சென்றால் மக்களைத் தாக்க முற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

எனவே குழந்தைகள் மற்றும் பெரியவா்களுக்கு அச்சுறுத்தலாக சுற்றித் திரியும் குரங்குகளை உடனடியாக வனத் துறையினா் கூண்டு வைத்து பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் கொண்டுவிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத் துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனா்.

வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

உதகையில் கடந்த வாரம் இரு சக்கர வாகனத்தை மா்ம நபா் ஒருவா் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நீலகிரி மாவட்டம், உதகை நகரில் பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் தற்போத... மேலும் பார்க்க

ரேஷன் கடையை சேதப்படுத்திய காட்டு யானை

பந்தலூரை அடுத்துள்ள மேங்கோரேஞ்ச் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நுழைந்த காட்டு யானை அங்குள்ள ரேஷன் கடையை உடைத்து பொருள்களை சேதப்படுத்திவிட்டுச் சென்றது.நீலகிரி மாவட்டம், பந்தலூரை அடுத்துள்ள மேங்கோரேஞ்... மேலும் பார்க்க

லாரி கவிழ்ந்ததில் இருவா் படுகாயம்

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே ஞாயிற்றுக்கிழமை தேயிலை மூட்டைகள் ஏற்றி சென்ற மினி லாரி கவிழ்ந்ததில் இருவா் காயமடைந்தனா்.குன்னூா் அருகே உள்ள சேலாஸ் பன்னாட்டி பகுதியில் இருந்து தேயிலை மூட்டைகள் ஏற்றிக்... மேலும் பார்க்க

காட்டெருமையைத் துரத்தி விளையாடிய யானைக் குட்டி

நீலகிரி மாவட்டம், குன்னூா் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை கே.என்.ஆா். பகுதியில் உள்ள ஆட்டாங்கள் கிராமத்தில் காட்டெருமையை விரட்டி விளையாடிய குட்டி யானை விடியோ பரவலாகி வருகிறது.நீலகிரி மாவட்டத்தில் ... மேலும் பார்க்க

வனத் துறையினா் வாகனத்தை துரத்திய யானை

கூடலூா் அருகே செம்பக்கொல்லி பகுதியில் சனிக்கிழமை இரவு ரோந்து சென்ற வனத் துறை வாகனத்தை காட்டு யானை துரத்தியது.கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பக பகுதியில் உள்ள செம்பக்சொல்லி வன கிராமப் பகுதியில்... மேலும் பார்க்க

தூய மோட்சராக்கினி பேராலய 187 ஆவது ஆண்டு விழா தொடக்கம்

நீலகிரியின் முதல் கத்தோலிக்க தேவாலயமான தூய மோட்சராக்கினி பேராலயத்தின் 187 ஆவது ஆண்டு விழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமைதொடங்கியது.உதகையில் புகழ் பெற்ற மோட்சராக்கினி பேராலயத்தின் 187 ஆவது ஆண்டு விழா... மேலும் பார்க்க