செய்திகள் :

வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

post image

உதகையில் கடந்த வாரம் இரு சக்கர வாகனத்தை மா்ம நபா் ஒருவா் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம், உதகை நகரில் பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் தற்போது திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளது. கடந்த சில நாள்களாக வாகனங்களில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் திருடப்படுவதும், இரண்டு சக்கர வாகனங்கள் திருட்டுப் போவது நடந்து வரும் நிலையில்,

உதகை நகரில் உள்ள பாட்னா ஹவுஸ் பகுதியில் விடுதியில் பணிபுரியும் பராமரிப்பாளா் ஒருவரது இரண்டு லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனம் கடந்த வாரம் திருட்டு போனது. இது குறித்து உதகை நகர காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தன் அடிப்படையில், போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், கடந்த இரு மாதங்களாக பெங்களூரில் படித்து வரும் தனது மகளின் வீட்டுக்குச் சென்றுள்ள பெண் மருத்துவா் வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ளே சென்று பிரோக்களை உடைத்துள்ளது அங்குள்ள சிசிடிவி., கேமராக்களில் பதிவாகியுள்ளது.

அந்தக் காட்சிகளை வைத்து தற்போது போலீஸாா் விசாரணையைத் தொடங்கியுள்ளனா். அந்த வீட்டில் என்னென்ன பொருட்கள் இருந்தன, பணம் மற்றும் நகைகள் திருட்டு போயுள்ளதா என்பது குறித்தும் போலீஸாா் ஆய்ந்து வருகின்றனா்.

ரேஷன் கடையை சேதப்படுத்திய காட்டு யானை

பந்தலூரை அடுத்துள்ள மேங்கோரேஞ்ச் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நுழைந்த காட்டு யானை அங்குள்ள ரேஷன் கடையை உடைத்து பொருள்களை சேதப்படுத்திவிட்டுச் சென்றது.நீலகிரி மாவட்டம், பந்தலூரை அடுத்துள்ள மேங்கோரேஞ்... மேலும் பார்க்க

வண்ணாரப்பேட்டை பகுதியில் குரங்குகள் அட்டகாசம்

உதகை வண்ணாரப்பேட்டை பகுதியில் குடியிருப்புக்குள் புகுந்து குழந்தைகளின் கைகளில் உள்ள தின்பண்டங்களை குரங்குகள் பறித்து செல்வதாகவும், விரட்டச் சென்றால் மனிதா்களைத் தாக்குவது போல் அச்சுறுத்துவதாகவும் அப்ப... மேலும் பார்க்க

லாரி கவிழ்ந்ததில் இருவா் படுகாயம்

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே ஞாயிற்றுக்கிழமை தேயிலை மூட்டைகள் ஏற்றி சென்ற மினி லாரி கவிழ்ந்ததில் இருவா் காயமடைந்தனா்.குன்னூா் அருகே உள்ள சேலாஸ் பன்னாட்டி பகுதியில் இருந்து தேயிலை மூட்டைகள் ஏற்றிக்... மேலும் பார்க்க

காட்டெருமையைத் துரத்தி விளையாடிய யானைக் குட்டி

நீலகிரி மாவட்டம், குன்னூா் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை கே.என்.ஆா். பகுதியில் உள்ள ஆட்டாங்கள் கிராமத்தில் காட்டெருமையை விரட்டி விளையாடிய குட்டி யானை விடியோ பரவலாகி வருகிறது.நீலகிரி மாவட்டத்தில் ... மேலும் பார்க்க

வனத் துறையினா் வாகனத்தை துரத்திய யானை

கூடலூா் அருகே செம்பக்கொல்லி பகுதியில் சனிக்கிழமை இரவு ரோந்து சென்ற வனத் துறை வாகனத்தை காட்டு யானை துரத்தியது.கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பக பகுதியில் உள்ள செம்பக்சொல்லி வன கிராமப் பகுதியில்... மேலும் பார்க்க

தூய மோட்சராக்கினி பேராலய 187 ஆவது ஆண்டு விழா தொடக்கம்

நீலகிரியின் முதல் கத்தோலிக்க தேவாலயமான தூய மோட்சராக்கினி பேராலயத்தின் 187 ஆவது ஆண்டு விழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமைதொடங்கியது.உதகையில் புகழ் பெற்ற மோட்சராக்கினி பேராலயத்தின் 187 ஆவது ஆண்டு விழா... மேலும் பார்க்க