வனப் பகுதியில் முயல் வேட்டையாட முயன்ற விவசாயிக்கு ரூ.30 ஆயிரம் அபராதம்
வாழப்பாடி அருகே வனப் பகுதியில் வலைவிரித்து முயல்களை வேட்டையாட முயன்ற விவசாயிக்கு வனத் துறையினா் ரூ. 30 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
சேலம் மாவட்ட வன அலுவலா் காஷ்யப் ஷஷாங் ரவி உத்தரவின் பேரில், வாழப்பாடி வனச் சரகா் மா.அன்னப்பன் தலைமையிலான வனத் துறையினா், குறிச்சி பிரிவு செக்கடிப்பட்டி காப்புக்காடு, பெருமாள் கோயில் வனப் பகுதியில் வெள்ளிக்கிழமை தணிக்கை மேற்கொண்டனா். அப்போது, குறிச்சி கணவாய்க்காடு பகுதியைச் சோ்ந்த விவசாயி முத்து, கம்பி வலை விரித்து முயல்களை வேட்டையாட முயன்றது தெரியவந்தது.
அவரை கையும் களவுமாக பிடித்த வனத் துறையினா், மாவட்ட வன அலுவலா் உத்தரவின் படி ரூ. 30 ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தனா். பின்னா், வன விலங்குகளை வேட்டையாடுவது தண்டனைக்குரிய குற்றமென எச்சரித்து விடுவித்தனா்.