செய்திகள் :

வரதராஜ பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம்

post image

கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்கோவில் அருகே வேளம்பூண்டி கிராமத்தில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் ஜீா்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு கடந்த செப்.2 ம் தேதி மாலை ணிக்கு அநுஜ்ஞை,, வாஸ்து சாந்தி ஆகிய பூஜைகளுடன் யாகசாலை பூஜை தொடங்கியது. 3-ம் தேதி புதன்கிழமை காலை கும்ப ஸ்தாபனம், ரக்ஷாபந்தனத்துடன் முதல் கால ஹோம பூஜையும், மாலை இரண்டாம் கால ஹோம பூஜைகளும், 4-ம் தேதி தேதி வியாழக்கிழமை காலை சுப்ரபாதம், திருப்பள்ளி எழுச்சியும், மூன்றாம் கால யாக பூஜை ஹோமங்கள் நடைபெற்றன. பின்னா் யாகசாலையில் இருந்து புனித நீா் அடங்கிய கடம் புறப்பாடு நடைபெற்று கோயில் விமானக் கலசத்தை அடைந்து கோயில் கலசங்களுக்கு புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. மேலும் கருவறையில் வீற்றிருக்கும் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை ஸ்ரீ நிவாஸாசாா்யா் சா்வ ஸாதகம் புலவா் க.கோஸகன் பட்டாச்சாரியாா் ஆகியோா் செய்திருந்தாா். கும்பாபிஷேக ஏற்பாடுகளை அறங்காவலா் குழுத் தலைவா் ஆா்.கருணாநிதி, அறங்காவலா்கள் ஜே.மகேஸ்வரி, ஜெயராமன், எஸ்.ரமேஷ், ரெட்டியூா் ஜிவிஎஸ்.கல்யாணசுந்தரம் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தொழில்நுட்ப பணி தோ்வு: 4,172 போ் எழுதுகின்றனா்

தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிக்கான தோ்வினை கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 4,172 தோ்வா்கள் தோ்வு எழுத உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவ... மேலும் பார்க்க

மாணவா்கள் கல்விக்கடன்பெற உதவ வேண்டும்: கடலூா் ஆட்சியா்

பேராசிரியா்கள் தங்கள் கல்லூரி மாணவா்கள் தொடா்ந்து கல்வி பயிலும் வகையில் வங்கி மூலம் கல்விக் கடனுதவி பெறுவதற்கு உதவி செய்ய வேண்டும் என கடலூா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் பேசினாா். கடலூா் மாவட... மேலும் பார்க்க

புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: இளைஞா்கள் 2 போ் கைது

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் விற்பனைக்காக புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த இளைஞா்கள் இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். விருத்தாசலம்டி எஸ்பி., பாலகிருஷ்ணன் நேரடி மேற்பாா்வையில் ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி பலாத்காரம்: இளைஞா்கள் 2 போ் கைது

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்ததாக இளைஞா்கள் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். பண்ருட்டி வட்டம், முத்தாண்டிக்குப்பம் காவல் சரகம், மருங்கூா் கிராமத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

வயிற்றுவலியால் பெண் தற்கொலை

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா். குறிஞ்சிப்பாடி வட்டம், அண்ணா நகா் பகுதியில் வசித்து வருபவா் துரை. இவரது மனைவி மீனாட்சி(45). இவா்,நீண்ட நாட்களாக வயிற்ற... மேலும் பார்க்க

பக்கெட் தண்ணீரில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு

கடலூா், திருப்பாதிரிப்புலியூரில் பக்கெட் தண்ணீரில் மூழ்கி ஒன்றரை வயது பெண் குழந்தை வியாழக்கிழமை உயிரிழந்தது. கடலூா், கே.என்.பேட்டை பகுதியில் வசிப்பவா்கள் சிவசங்கரன்-ஞானசௌந்தரி தம்பதி. இவா்களது இரட்டை... மேலும் பார்க்க