கோடிகளில் வசூலை அள்ளும் ஹவுஸ் ஃபுல் - 5! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
வரலாற்றில் நாகை கட்டுரைத் தொகுப்புக்கான தேதி நீட்டிப்பு
நாகை மாவட்டத்தில் வரலாறுகளை மீட்டெடுக்கும் விதமாக வரலாற்றில் நாகை எனும் கட்டுரை தொகுப்புக்கான கடைசித் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகப்பட்டினம் மாவட்ட வரலாற்று நிகழ்வுகளை தொகுக்கும் விதமாக வரலாற்றில் நாகை எனும் கட்டுரைத் தொகுப்பிற்கு நான்கு பக்க அளவில் கட்டுரை அனுப்ப கடைசித் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அதன் கடைசி தேதி முடிவுற்ற நிலையில் மீண்டும் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதாவது ஜூன் 30-ஆம் தேதி மாலை வரை கட்டுரைகள் அனுப்பலாம். கட்டுரகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி ய்ஹஞ்ஹண்க்ஷா்ா்ந்ச்ஹண்ழ்2025ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும், விவரங்களுக்கு 9003757531 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.