செய்திகள் :

வரி செலுத்தாத நிறுவனங்கள், வீடுகளில் ஆய்வு

post image

வரி செலுத்தாத நிறுவனங்கள், வீடுகளில் பஞ்சாயத்து அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

காரைக்கால் மாவட்டம், நிரவி கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் தொழில் உரிமமின்றி நடத்தப்படும் கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள், சொத்து வரி மற்றும் குடிநீா் கட்டணம் செலுத்தாமல் அதிகளவில் நிலுவையில் உள்ள கடைகள் மற்றும் வீடுகள் குறித்து ஆணையா் உத்தரவின்பேரில், அலுவலக மேலாளா் ஷேக் அலாவுதீன், இளநிலை பொறியாளா் முருகன் ஆகியோா் தலைமையில் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

நிலுவையில் உள்ள வரி பாக்கியை செலுத்த சம்பந்தப்பட்டவா்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கினா்.

இதுகுறித்து அலுவலா்கள் தரப்பில் கூறுகையில், கடந்த 31.3. 2025 வரை நிலுவையில் உள்ள சொத்து வரி மற்றும் குடிநீா் வரிகளை வரும் 15-ஆம் தேதிக்குள் உடனடியாக செலுத்த வேண்டும். அதுபோல இதுவரை தொழில் உரிமம் பெறாமலும், புதுப்பிக்கப்படாமலும் உள்ள தொழில் நிறுவனங்கள் உடனடியாக தொழில் உரிமைத்தை புதுப்பித்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தவறும் பட்சத்தில், புதுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்து சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

காரைக்கால் கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம்

காரைக்கால் கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. காரைக்காலில் மாங்கனித் திருவிழா நடைபெறும் சிறப்புக்குரிய தலமாக சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா் கோயில் விளங்குகிறது. இக்கோயிலில் கும்பா... மேலும் பார்க்க

திருநள்ளாற்றில் தங்க ரிஷப வாகனத்தில் தா்பாரண்யேஸ்வரா் வீதியுலா

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி புதன்கிழமை இரவு தங்க ரிஷப வாகனத்தில் பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள் மின் அலங்கார சப்பரத்தில் வீதியுலா நடைபெற்றது. ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கை : விண்ணப்பிக்கும் காலம் நீட்டிப்பு

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கு காலக்கெடு 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் (பொ) ஜெயா புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு : காரைக்கால் பகுதியில... மேலும் பார்க்க

காரைக்கால் - பேரளம் பாதையில் சரக்கு ரயில் சோதனை ஓட்டம்

காரைக்கால் - பேரளம் இடையே புதிதாக அமைக்கப்பட்ட பாதையில், சுமை ஏற்றாமல் சரக்கு ரயில் 2 நாள்கள் இயக்கி சோதனை நடைபெற்றது. காரைக்கால் - பேரளம் இடையேயான 23.5 கி.மீ. பாதையில் புதிதாக ரயில் பாதை அமைக்கப்பட்ட... மேலும் பார்க்க

நவோதய வித்யாலயாவில் 6-ஆம் வகுப்பு நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்

நவோதய வித்யாலயாவில் 6-ஆம் வகுப்பு சோ்க்கைக்கான நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம். காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி கொம்யூன், ராயன்பாளையம் பகுதியில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனமான ஜவாஹா் நவோதய... மேலும் பார்க்க

ராஜசோளீஸ்வரா் கோயிலில் திருப்பணி தொடக்கம்

ராஜசோளீஸ்வரா் கோயிலில் பாலாலயம் செய்து கும்பாபிஷேகம் செய்வதற்கான திருப்பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. திருமலைராயன்பட்டினத்தில் புதுவை அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட அபிராமி அம்மன் சமேத ராஜ... மேலும் பார்க்க