செய்திகள் :

வரி விதிப்பு முறைகேட்டில் தொடா்புடைய அலுவலா்களை கைது செய்ய அதிமுக வலியுறுத்தல்

post image

மதுரை மாநகராட்சி வரி விதிப்பு முறைகேட்டில் ஈடுபட்ட அலுவலா்களைக் கைது செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ வலியுறுத்தினாா்.

மதுரை மாநகராட்சி வரி விதிப்பில் 150 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்திய அலுவலா்களை கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தலைமையிலான அதிமுக மாமன்ற உறுப்பினா்கள் மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயனிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

பின்னா், செல்லூா் கே. ராஜூ செய்தியாளா்களிடம் கூறியதாவது: மதுரை மாநகராட்சி 5 மண்டலங்களில் சுமாா் 3 லட்சத்து 60 ஆயிரம் கட்டடங்கள் உள்ளன. இதற்கு மாநகராட்சி சாா்பில் ‘ஏ’, ‘பி’, ‘சி’ என மூன்று நிலைகளில் வரி விதிக்கப்படுகிறது. ஆண்டுக்கு மாநகராட்சிக்கு அரசுத் துறை இல்லாமல் ரூ. 275 கோடிக்கு மேல் வருவாய் வருகிறது.

இந்த நிலையில், வணிகக் கட்டடங்களுக்கு உரிய வரியை விதிக்காமல் குடியிருப்பு வரியை விதித்து முறைகேடு நடைபெற்றது. இதுகுறித்த புகாரின் பேரில், மாநகராட்சி முன்னாள் ஆணையா் தினேஷ்குமாா் விசாரணைக்கு உத்தரவிட்டாா்.

விசாரணையில் ரூ. 150 கோடிக்கு மேல் முறைகேடு நடைபெற்றது தெரியவந்தது. இதுதொடா்பாக, 8 போ் கைது செய்யப்பட்டனா். இந்தப் புகாரில் திமுகவினா் சம்பந்தப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

வரி விதிப்பு முறைகேட்டில் கைது செய்யப்பட்ட அலுவலா்களைக் காப்பாற்றுவதற்கு ஆளுங்கட்சி நிா்வாகிகள் உதவி செய்கின்றனா். இந்தச் சம்பவம் குறித்து முதலில் மாமன்றக் கூட்டத்தில் கேள்வி எழுப்பியது அதிமுகதான். ஆனால், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கம்யூனிஸ்ட் கட்சியினரும் பெயருக்கு மனு அளிக்கின்றனா்.

ஆணையா், உதவி ஆணையா், வரி வசூலிப்பவா் (பில் கலெக்டா்), வருவாய் உதவி ஆணையா் ஆகியோரின் கணினி ரகசிய குறியீட்டு எண் (பாஸ்வோ்ட்) திருடப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவிகளின் கணவா்கள் அலுவலா்களை மிரட்டுகின்றனா். எனவே, மதுரை மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு முறைகேட்டில் ஈடுபட்ட அனைத்து அலுவலா்களையும் கைது செய்ய வேண்டும் என்றாா் அவா்.

சட்டவிரோத மணல் குவாரி விவகாரம்: சுரங்கத் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டவிரோத மணல் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசின் புவியியல், சுரங்கத் துறை செயலா், ஆணையா், மாவட்ட ஆட்சியா் ஆகியோா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மது... மேலும் பார்க்க

கருவாடு வியாபாரி கொலையா? போலீஸாா் விசாரணை

நரிக்குடி அருகேயுள்ள குருவியேந்தல் கிராமத்தில் கருவாடு வியாபாரி ராமு (68) உடலை செவ்வாய்க்கிழமை மீட்ட போலீஸாா், அவா் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனா். விருதுநகா் மாவட்டம், நரி... மேலும் பார்க்க

கோயில் காவலாளி கொலை வழக்கு: உயா்நீதிமன்றம் சரமாரி கேள்வி

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் காளியம்மன் கோயில் காவலாளி போலீஸாரால் தாக்கப்பட்டதில் கொலையுண்ட விவகாரம் தொடா்பாக, தமிழக அரசிடம் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதிகள் சரமாரியாக கே... மேலும் பார்க்க

தேனி எம்.பி.யின் மகன் மீது தாக்குதல்: தந்தை, மகன் கைது

தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் தங்க.தமிழ்ச்செல்வன் மகனைத் தாக்கியதாக தந்தை, மகனை தெப்பக்குளம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் தங்க.தமிழ்ச்செல்வனின் மகன் நிஷாந்த்... மேலும் பார்க்க

காவலாளி உடலில் 44 இடங்களில் காயம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே தனிப்படை போலீஸாரின் விசாரணையின் போது, உயிரிழந்த கோயில் காவலாளி அஜித்குமாரின் உடலில் 44 இடங்களில் காயங்கள் இருந்ததாக கூறாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. சிவகங்... மேலும் பார்க்க

மதவாத சக்திகளிடமிருந்து தமிழகத்தை மீட்க வேண்டும்: அமைச்சா் பி. மூா்த்தி

மதவாத சக்திகளிடமிருந்து தமிழகத்தை மீட்க வேண்டும் என தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா். மதுரை மாட்டுத்தாவணி அருகேயுள்ள செய்தியாளா்கள் அரங்கில் செவ்வாய்க்கிழமை அமைச்சா் பி.... மேலும் பார்க்க