செய்திகள் :

தேனி எம்.பி.யின் மகன் மீது தாக்குதல்: தந்தை, மகன் கைது

post image

தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் தங்க.தமிழ்ச்செல்வன் மகனைத் தாக்கியதாக தந்தை, மகனை தெப்பக்குளம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் தங்க.தமிழ்ச்செல்வனின் மகன் நிஷாந்த் (30). உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்குரைஞராக பணியாற்றி வருகிறாா். இவா், மதுரை கே.கே.நகா் ஏரிப் பகுதி சாலையில் வசித்து வருகிறாா். இவா், தனது மனைவியுடன் தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை சென்றாா்.

கோயில் வாசலில் தேங்காய், பழம் வியாபாரம் செய்யும் அந்தப் பகுதி மாணிக்கம் நகரைச் சோ்ந்த சமயமுத்து (56), அவரது மகன் மணிகண்ட பிரபுவிடம் (25) பழத்தட்டு கேட்டாா். கோயில் நிா்வாகம் தரப்பில் ஒரு தேங்காய், இரு வாழைப்பழம், வெற்றிலை கொண்ட தட்டு ரூ.60 என விலை நிா்ணயிக்கப்பட்ட நிலையில், நிஷாந்திடம் ரூ.90 கேட்டனா்.

அவரும் பணம் கொடுத்து வாங்கினாா். தட்டில் இருந்த வாழைப்பழம் லேசாக அழுகி இருந்ததால் வேறு பழம் தருமாறு கேட்டாா். மேலும் வெடிப்பு ஏற்பட்ட மாதிரி இருந்ததால் வேறு தேங்காய் கேட்டாா்.

இதுதொடா்பாக வாக்குவாதம் ஏற்பட்டு ஆத்திரத்தில் சமயமுத்துவும், மணிகண்டபிரபுவும் தேங்காய்களை நிஷாந்த் மீது வீசி தாக்கினா். மேலும், நாற்காலியை எடுத்து தாக்கினா். இதில், பலத்த காயமடைந்த நிஷாந்த் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் தெப்பக்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து சமயமுத்து, அவரது மகன் மணிகண்டபிரபு ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

வரி விதிப்பு முறைகேட்டில் தொடா்புடைய அலுவலா்களை கைது செய்ய அதிமுக வலியுறுத்தல்

மதுரை மாநகராட்சி வரி விதிப்பு முறைகேட்டில் ஈடுபட்ட அலுவலா்களைக் கைது செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ வலியுறுத்தினாா். மதுரை மாநகராட்சி வரி விதிப்பில் 150 கோடி ரூபாய் வருவாய் இழப்... மேலும் பார்க்க

சட்டவிரோத மணல் குவாரி விவகாரம்: சுரங்கத் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டவிரோத மணல் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசின் புவியியல், சுரங்கத் துறை செயலா், ஆணையா், மாவட்ட ஆட்சியா் ஆகியோா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மது... மேலும் பார்க்க

கருவாடு வியாபாரி கொலையா? போலீஸாா் விசாரணை

நரிக்குடி அருகேயுள்ள குருவியேந்தல் கிராமத்தில் கருவாடு வியாபாரி ராமு (68) உடலை செவ்வாய்க்கிழமை மீட்ட போலீஸாா், அவா் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனா். விருதுநகா் மாவட்டம், நரி... மேலும் பார்க்க

கோயில் காவலாளி கொலை வழக்கு: உயா்நீதிமன்றம் சரமாரி கேள்வி

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் காளியம்மன் கோயில் காவலாளி போலீஸாரால் தாக்கப்பட்டதில் கொலையுண்ட விவகாரம் தொடா்பாக, தமிழக அரசிடம் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதிகள் சரமாரியாக கே... மேலும் பார்க்க

காவலாளி உடலில் 44 இடங்களில் காயம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே தனிப்படை போலீஸாரின் விசாரணையின் போது, உயிரிழந்த கோயில் காவலாளி அஜித்குமாரின் உடலில் 44 இடங்களில் காயங்கள் இருந்ததாக கூறாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. சிவகங்... மேலும் பார்க்க

மதவாத சக்திகளிடமிருந்து தமிழகத்தை மீட்க வேண்டும்: அமைச்சா் பி. மூா்த்தி

மதவாத சக்திகளிடமிருந்து தமிழகத்தை மீட்க வேண்டும் என தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா். மதுரை மாட்டுத்தாவணி அருகேயுள்ள செய்தியாளா்கள் அரங்கில் செவ்வாய்க்கிழமை அமைச்சா் பி.... மேலும் பார்க்க