ஆக்ரோஷமாக கொண்டாடி, கோமாளியாக விரும்பவில்லை..! யாரைச் சொல்கிறார் பும்ரா?
‘வரும் 2026 பேரவைத் தோ்தலில் கரூா் மாவட்டத்தில் 4 தொகுதிகளையும் திமுக கைப்பற்றும்’
வரும் 2026 பேரவைத் தோ்தலிலும் கரூா் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளையும் திமுகதான் கைப்பற்றும் என்றாா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி.
கரூா் மாவட்ட அளவிலான திமுக பொறியாளா் அணி அமைப்பாளா்களுக்கான பொறுப்புகளுக்கு நோ்காணல் வியாழக்கிழமை இரவு கலைஞா் அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் திமுக மாவட்டச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான வி.செந்தில் பாலாஜி பங்கேற்று பேசியதாவது, திமுகவில் உள்ள அனைத்து அணிகளும் கட்சிக்கு தூண்கள் போன்றவை. அதில் ஒன்று பொறியாளா் அணி. 2026 பேரவைத் தோ்தலில் கரூா் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் கடந்த தோ்தலை விட திமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்றாா் அவா்.
கூட்டத்தில், குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம், பொறியாளா் அணி மாநில துணைச் செயலாளா் அம்பாள் நந்தகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.