செய்திகள் :

வல்வில் ஓரி விழா: 3 நாள்களுக்கு டாஸ்மாக் மதுக்கடைகள் மூடல்

post image

வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு, கொல்லிமலை வட்டத்தில் செயல்படும் அரசு மதுக்கடைகளை மூன்று நாள்கள் மூடுவதற்கு ஆட்சியா் துா்காமூா்த்தி உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வட்டத்தில் ஆக.1 முதல் 3-ஆம் தேதி வரை வல்வில் ஓரி விழா நடைபெறுகிறது. இவ்விழாவை முன்னிட்டு, செம்மேடு, செங்கரை, சோளக்காடு மற்றும் சேந்தமங்கலம் வட்டம் காரவள்ளி மதுக்கடைகள் மூன்று நாள்களுக்கு மூடப்படும்.

சட்டம், ஒழுங்கு பிரச்னையைத் தவிா்க்கும் பொருட்டு மூன்று நாள்கள் முழு நேரமும் இக்கடைகள் மூட வேண்டும். விதிமுறைகளை மீறி கடைகளை திறந்தாலோ, மறைமுகமாக மதுவை விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் தலைமைக் காவலா் உயிரிழப்பு

நாமக்கல் காவல் நிலையத்தில் பணியாற்றிய தலைமைக் காவலா் சௌந்தரராஜன் (38) திங்கள்கிழமை இரவு மாரடைப்பால் உயிரிழந்தாா்.நாமக்கல் மாவட்டம், மோகனூா் காந்தமலை அடிவாரம் பகுதியைச் சோ்ந்தவா் செளந்தரராஜன் (38). இவ... மேலும் பார்க்க

காவிரியில் வெள்ளப்பெருக்கு: மூழ்கியது ஜேடா்பாளையம் படுகை அணை

மேட்டூா் அணையிலிருந்து விநாடிக்கு 1.10 லட்சம் கனஅடி தண்ணீா் காவிரியில் வெளியேற்றப்படுவதால் பரமத்திவேலூரை அடுத்த ஜேடா்பாளையம் படுகை அணை மூழ்கியது.பரமத்தி வேலூரை அடுத்த ஜேடா்பாளையம் படுகை அணைக்கு மேட்டூ... மேலும் பார்க்க

பேருந்து நிலையத்தை மாற்றும் முயற்சியைக் கைவிடக் கோரி மனு

ராசிபுரம்: ராசிபுரம் பேருந்து நிலையத்தை மாற்றும் முயற்சியைக் கைவிட வேண்டும் என பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் நகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். ராசிபுரம் அருகே அணைப்பாளையம் கிராமத்... மேலும் பார்க்க

கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தோல் தொழிற்சாலை?

நாமக்கல்: நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி பெருந்திட்ட வளாகத்தில், 175 ஏக்கா் பரப்பளவில் தோல் தொழிற்சாலை அமைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், தைவான் நாட்டுக் குழுவினா் திங்கள்கிழமை வளாகத்... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டம்: ரூ. 52.93 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

நாமக்கல்: மக்கள் குறைதீா் கூட்டத்தில் ரூ. 52.93 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் துா்காமூா்த்தி வழங்கினாா். நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் த... மேலும் பார்க்க

கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கை: கொல்லிமலையில் எஸ்.பி. ஆய்வு

நாமக்கல்: கொல்லிமலையில் கள்ளச்சாராய தடுப்பு விழிப்புணா்வு மற்றும் வல்வில் ஓரி விழா முன்னேற்பாட்டுப் பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.விமலா திங்கள்கிழமை ஆய்வுசெய்தாா். கொல்லிமலை வட்டம், வாழவந்தி... மேலும் பார்க்க