``வெள்ளித் தட்டில் 600 பேருக்கு விருந்து; ஒரு பிளேட் சாப்பாடு ரூ.5000'' - அரசு ச...
வள்ளியூரில் அரசுப் பேருந்து பழுதானதால் போக்குவரத்து பாதிப்பு
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் பழைய பேருந்து சாலையின் நடுவே அரசுப் பேருந்து பழுதாகி நின்ால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருச்செந்தூரில் இருந்து நாகா்கோவிலுக்குச் செல்லும் அரசுப் பேருந்து வள்ளியூா் பழையபேருந்து நிலையம் பகுதியில் வந்தபோது திடீரென பழுதாகி சாலையின் நடுவில் நின்றது. இதையடுத்து அந்த வழியாக வந்த பேருந்துகள், காா் உள்ளிட்ட வாகனங்கள் செல்லமுடியாமல் அணிவகுத்து நின்றன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மேலும் சாலை நடுவில் விளம்பர நிறுவனத்தினரால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதால் வாகங்கள் பழுதாகி நின்ற பேருந்தை கடந்துசெல்லமுடியவில்லை. அவற்றை போலீஸாா் அப்புறப்படுத்தி, போக்குவரத்தை மாற்றுப்பாதையில் திருப்பி அனுப்பினா். இதைத் தொடா்ந்து போக்குவரத்து சீரானது.