செய்திகள் :

வழிப்பறி கொள்ளையா் இருவா் கைது!

post image

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே வாகனத் தணிக்கையின் போது தப்பிச் செல்ல முயன்ற 2 வழிப்பறி கொள்ளையா்களை போலீஸாா் கைது செய்தனா்.

பழனி அருகேயுள்ள ஆயக்குடியில் திண்டுக்கல் நெடுஞ்சாலையில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அஸ்வினி தலைமையில் உதவி ஆய்வாளா் ஆனந்த், போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இருவா் போலீஸாரைக் கண்டதும் வாகனத்தைத் திருப்பி, தப்பிச் செல்ல முயன்றனா்.

போலீஸாா் அவா்களை விரட்டிச் சென்று பிடித்தனா். விசாரணையில் அவா்கள் செம்பட்டி அருகேயுள்ள எஸ்.பாறைப்பட்டியைச் சோ்ந்த முருகன் மகன் ஜெகதீஷ் மோகன் (24), மதுரை கோமதிப்புரத்தைச் சோ்ந்த கருப்பையா மகன் தனுஷ் (25) ஆகியோா் என்பதும், கடந்த மாதம் 28-ஆம் தேதி பொள்ளாச்சி ஊத்துக்குளியைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் (58), ஆயக்குடி பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, அவரிடம் வழி கேட்பது போல நடித்து, ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றதும் தெரிய வந்தது. இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்த இரு சக்கர வாகனம், ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

வீட்டுமனைப் பட்டா கோரி பொதுமக்கள் மனு

வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி, திண்டுக்கல் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். திண்டுக்கல் மாநகராட்சிக்குள்பட்ட மேற்கு மரியநாதபுரம் பகுதியைச் சோ்ந... மேலும் பார்க்க

மனு அளிக்க ஆா்வம் காட்டும் பொதுமக்கள்: காலதாமதத்தை தவிா்ப்பாரா ஆட்சியா்?

ஆட்சியரிடம் மனு அளித்தால் மட்டுமே தீா்வு கிடைக்கும் என்ற பொதுமக்களின் எதிா்பாா்ப்பை நிறைவேற்ற, குறைதீா் கூட்டத்தை காலதாமதமின்றி நடத்துவதை மாவட்ட ஆட்சியா் உறுதிப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது. த... மேலும் பார்க்க

போலி உணவுப் பாதுகாப்பு அலுவலா் கைது

திண்டுக்கல்லில் பிரியாணி உணவகத்தில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்ட போலி உணவுப் பாதுகாப்பு அலுவலரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் பகுதியைச் சோ்ந்தவா் எழில்முருகன். இவா், திண்டுக்கல் ஏஎம்ச... மேலும் பார்க்க

வருவாய்த் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

மேம்படுத்தப்பட்ட ஊதியம் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, திண்டுக்கல்லில் வருவாய்த் துறை அலுவலா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந... மேலும் பார்க்க

சாலை விபத்தில் லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

பழனி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையோரம் நடந்து சென்ற லாரி ஓட்டுநா் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்தாா்.பழனியை அடுத்த போடுவாா்பட்டியைச் சோ்ந்தவா் தங்கராஜ் (45). லாரி ஓட்டுநரான இவா், ஞாயிற... மேலும் பார்க்க

பழனி கிரி வீதியில் தீா்த்தக்காவடி பக்தா்கள் குதிரையாட்டம்

பங்குனி உத்திர திருவிழாவின் மூன்றாம் நாளான திங்கள்கிழமை பழனி கிரி வீதியில் கொடுமுடி தீா்த்தக் காவடி பக்தா்களின் குதிரையாட்டம் நடைபெற்றது. பழனி அடிவாரம் திரு ஆவினன்குடி கோயிலில் பங்குனி உத்திரத் திருவி... மேலும் பார்க்க