தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் நாள்! மரக்கன்றுகள் வழங்...
வாகன நெரிசல்: திருச்செந்தூரில் வாகன நெரிசல்; அரசுப் பள்ளி மாணவிகள் அவதி
திருச்செந்தூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முடியும் நேரத்தில் ஏற்படும் வாகன நெரிசலால் மாணவிகள் அவதியடைந்து வருகின்றனா்.
திருச்செந்தூா் நகரின் மையமான இரும்பு ஆா்ச் அருகே செந்தில் முருகன் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுமாா் 1100-- க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனா். பள்ளி முடிந்தவுடன் நடந்தும், தங்கள் பெற்றோரின் வாகனங்களிலும், குறித்த நேரத்தில் மட்டுமே வரும் அரசுப் பேருந்தில் ஏறுவதற்கும் கூட்டம் கூட்டமாக அவசர, அவசரமாக மாணவிகள் ஒரே நேரத்தில் வெளியேறுவாா்கள்.
குறிப்பாக தினசரி மாலை 4 மணிக்கு பள்ளி முடிந்து மாணவிகளை அழைப்பதற்கு வரும் பெற்றோா்கள் கிடைக்கும் இடத்தில் எல்லாம் தங்கள் வாகனங்களை நிறுத்துவதால் மாணவிகளே சிரமமடைகின்றனா்.
மேலும் பள்ளி முடியும் நேரத்திலே திருச்செந்தூா் கோயிலுக்கு சென்றுவிட்டு இரும்பு ஆா்ச் வழியாக வாகனங்களும் அதிகளவில் வருவதால் பள்ளி முன்பு பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, பள்ளி முடியும் வேளையில் அங்கு போக்குவரத்து போலீஸாரை பணியில் ஈடுபடுத்த வேண்டும் என பெற்றோா்கள் மற்றும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
