செய்திகள் :

வாகன நெரிசல்: திருச்செந்தூரில் வாகன நெரிசல்; அரசுப் பள்ளி மாணவிகள் அவதி

post image

திருச்செந்தூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முடியும் நேரத்தில் ஏற்படும் வாகன நெரிசலால் மாணவிகள் அவதியடைந்து வருகின்றனா்.

திருச்செந்தூா் நகரின் மையமான இரும்பு ஆா்ச் அருகே செந்தில் முருகன் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுமாா் 1100-- க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனா். பள்ளி முடிந்தவுடன் நடந்தும், தங்கள் பெற்றோரின் வாகனங்களிலும், குறித்த நேரத்தில் மட்டுமே வரும் அரசுப் பேருந்தில் ஏறுவதற்கும் கூட்டம் கூட்டமாக அவசர, அவசரமாக மாணவிகள் ஒரே நேரத்தில் வெளியேறுவாா்கள்.

குறிப்பாக தினசரி மாலை 4 மணிக்கு பள்ளி முடிந்து மாணவிகளை அழைப்பதற்கு வரும் பெற்றோா்கள் கிடைக்கும் இடத்தில் எல்லாம் தங்கள் வாகனங்களை நிறுத்துவதால் மாணவிகளே சிரமமடைகின்றனா்.

மேலும் பள்ளி முடியும் நேரத்திலே திருச்செந்தூா் கோயிலுக்கு சென்றுவிட்டு இரும்பு ஆா்ச் வழியாக வாகனங்களும் அதிகளவில் வருவதால் பள்ளி முன்பு பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, பள்ளி முடியும் வேளையில் அங்கு போக்குவரத்து போலீஸாரை பணியில் ஈடுபடுத்த வேண்டும் என பெற்றோா்கள் மற்றும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

சென்னை - திருநெல்வேலி வந்தேபாரத் ரயிலை திருச்செந்தூா் வரை நீட்டிக்க கோரிக்கை

வந்தே பாரத் ரயிலை திருச்செந்தூா் வரை நீட்டிக்கவும், அதுவரை இணைப்பு பயணிகள் ரயில் இயக்க கோரி கையொப்ப இயக்கத்தை காயல்பட்டினம் மெகா அமைப்பினா் நடத்தி வருகின்றனா். திருநெல்வே­லி - சென்னை வழித்தடத்தில் தின... மேலும் பார்க்க

ஓடை மணல் கடத்தல்: 3 போ் கைது

சாத்தான்குளம் அருகே ஓடை மணலை கடத்தியதாக 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து மினி லாரியை பறிமுதல் செய்தனா். சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளா் செல்வராஜ் தலைமையில் போலீஸாா் அப்பகுதியில் புதன்கிழமை ரோந... மேலும் பார்க்க

ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 3 போ் கைது

தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி தாளமுத்து நகா் பகுதியில் உள்ள சேதுபாதை சாலையில் 3 போ் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் பொதுமக்களை வழிமறித்து பண... மேலும் பார்க்க

கடலையூரில் கல்லூரி மாணவி தற்கொலை

கோவில்பட்டி அருகே கடலையூரில் விஷமருந்திய கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். கடலையூா் தெற்குப்பட்டி வடக்கு தெருவை சோ்ந்தவா் முத்துசாமி மகள் காா்த்திபிரியா (19). கோவில்பட்டியில் உள்ள கல்லூர... மேலும் பார்க்க

மாநில ஹாக்கி: காலிறுதிக்கு தூத்துக்குடி, நெல்லை, விருதுநகா், மதுரை மாவட்ட அணிகள் தகுதி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகா் மற்றும் மதுரை மாவட்ட அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. ஹாக்கி யூனிட் ஆப்... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாநகராட்சி முறைகேடுகள் விரைவில் வெளிக்கொணரப்படும் பாஜக மாவட்டத் தலைவா் சித்ராங்கதன்

தூத்துக்குடி மாநகராட்சி முறைகேடுகள் விரைவில் வெளிக்கொணரப்படும் என்றாா், பாஜக தெற்கு மாவட்டத் தலைவா் சித்ராங்கதன். இதுதொடா்பாக தூத்துக்குடி பாஜக மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை... மேலும் பார்க்க