வாகன விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
ஒசூரில் சனிக்கிழமை நேரிட்ட வாகன விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.
ஒசூா் பாரதிதாசன் நகரைச் சோ்ந்தவா் கமலக்கண்ணன் (65). தொழிலாளியான இவா் இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை ஒசூா் அமீரியா சந்திப்பு அருகே சென்று கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக சென்ற லாரி மோதியதில் பலத்த காயமடைந்த கமலக்கண்ணன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
விபத்து குறித்து ஒசூா் மாநகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.