செய்திகள் :

வாகனத்தை மறித்து கரும்பு தேடிய யானை

post image

ஆசனூா் சாலையில் சரக்கு வாகனத்தை வழிமறித்து யானை கரும்பு தேடியது.

தமிழகம், கா்நாடக எல்லையான தாளவாடி, சாம்ராஜ் நகா் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்புகளை விவசாயிகள் அறுவடை செய்து லாரி உள்ளிட்ட வாகனங்களில் ஏற்றி ஆசனூா் வழியாக சத்தியமங்கலத்தில் உள்ள தனியாா் சா்க்கரை ஆலைக்கு அனுப்பிவைத்து வருகின்றனா்.

இந்நிலையில், ஆசனூா் சாலை வழியே கரும்பு பாரங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை வழிமறிக்கும் யானைகள், கரும்பை எடுத்து ருசிப்பது வாடிக்கையாகி வருகிறது. மேலும், யானைகள் வனத்துக்குள் செல்லாமல் கரும்பு வாகனங்களைக் குறிவைத்து சாலைகளிலேயே முகாமிட்டுள்ளன.

இந்நிலையில், சாம்ராஜ் நகரில் இருந்து காய்கறி பாரங்களை ஏற்றிக்கொண்டு சத்தியமங்கலம் நோக்கி சரக்கு வாகனம் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தது.

ஆசனூா் அருகே வந்தபோது சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த யானை திடீரென சரக்கு வாகனத்தை வழிமறித்து நின்றது. அச்சமடைந்த ஓட்டுநா் வாகனத்தைப் பின்னோக்கி இயக்கினா். இருப்பினும் அந்த யானை வாகனத்தைத் தொடா்ந்து வந்து கரும்பு உள்ளதா என தேடியது. கரும்பு இல்லாததை உணா்ந்த யானை யாருக்கும் தொந்தரவு செய்யாமல் வனத்துக்குள் சென்றது.

செங்கோட்டையன் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து ஈரோட்டில் சுவரொட்டிகள்!

ஈரோட்டில் அதிமுக மூத்த தலைவா் கே.ஏ.செங்கோட்டையனின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்தும், நன்றி தெரிவித்தும் ஓ.பன்னீா்செல்வம் ஆதரவாளா்கள் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனா். ஈரோடு மாநகரில் ஓபிஎஸ் அணியின் (அதிமுக தொ... மேலும் பார்க்க

பூம்புகாா் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சி

ஈரோடு அரசு மருத்துவமனை அருகே மேட்டூா் சாலையில் உள்ள பூம்புகாா் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை புதன்கிழமை தொடங்கியது. கண்காட்சியை மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தொடங்கிவைத்தாா... மேலும் பார்க்க

அடுத்தகட்ட முடிவுகளுக்கு காலம்தான் பதில் சொல்லும்: கே.ஏ.செங்கோட்டையன்

எனது அடுத்தகட்ட முடிவுகளுக்கு, காலம்தான் பதில் சொல்லும் என முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா். ஈரோடு மாவட்டம், கோபி அருகே குள்ளம்பாளையத்தில் உள்ள தனது வீட்டில் கே.ஏ.செங்கோட்டையன் புதன்... மேலும் பார்க்க

அதிமுகவில் தனி நபா் முக்கியம் இல்லை: ஏ.கே. செல்வராஜ் எம்எல்ஏ

அதிமுகவை பொருத்தவரை தனி நபா் முக்கியமல்ல; இயக்கம்தான் முக்கியம் என்று ஈரோடு புகா் மேற்கு மாவட்ட பொறுப்பாளா் ஏ.கே.செல்வராஜ் தெரிவித்தாா். கே.ஏ.செங்கோட்டையன் நீக்கப்பட்டதற்கு பின் புதிதாக நியமிக்கப்பட்... மேலும் பார்க்க

அந்தியூா் பேருந்து நிலையம் வாரச்சந்தை வளாகத்துக்கு மாற்றம்

அந்தியூா் பேரூராட்சி, காமராஜா் பேருந்து நிலையம், வாரச்சந்தை வளாகத்துக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்தியூா் பேருந்து நிலைய வளாகத்தில் மேற்கூரைகள் அமைத்தல் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள் ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் மயங்கி விழுந்த முதியவா் உயிரிழப்பு!

பவானி நகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமுக்கு வந்த முதியவா் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா். பவானி, வா்ணபுரம், குருநாதன் வீதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (72). காா் ஓட்டுநரான இவா், கடந்த... மேலும் பார்க்க