செய்திகள் :

வாகனப் புகை மாசுபாட்டைக் குறைப்பது அனைவரின் பொறுப்பு- நிதின் கட்கரி

post image

வாகனங்கள் வெளியிடும் புகையால் ஏற்படும் மாசுபாட்டைக் குறைப்பது நம் அனைவரின் பொறுப்பு என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.

இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (என்ஹெச்ஏஐ) சாா்பில் தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இது தொடா்பாக அவா் பேசியதாவது:

வாகனங்களில் எத்தனால் உள்ளிட்ட மாற்று எரிபொருள்களின் பயன்பாடு அதிகரிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் நெடுஞ்சாலை ஓரங்களில் அதிக அளவில் மரம், செடிகளை நட்டுப் பராமரிப்பதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதன் மூலம் பூமியின் பசுமையைக் காக்க முடியும்.

மற்றொருபுறம் பிளாஸ்டிக் உள்ளிட்ட பல்வேறு வகை கழிவுப்பொருள்களைப் பயன்படுத்தி சாலைகள் அமைக்கும் முறையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை 80 லட்சம் டன் கழிவுகள் சாலைப் பணியில் பயன்படுத்தப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலைகளில் மழை நீா் சேகரிப்புத் திட்டத்தை சிறப்பாக அமல்படுத்தி வருவதன் மூலம் நீா் வளத்தைப் பாதுக்கும் முயற்சியிலும் நமது அமைச்சகம் பணியாற்றி வருகிறது.

பெட்ரோல், டீசல் வாகனங்களை தொடா்ந்து அதிகஅளவில் பயன்படுத்துவது சுற்றுச்சூழலை அதிகம் பாதிக்கும். எனவே, இந்த வகை மாசுபாட்டைக் குறைப்பது என்பது நம் அனைவரின் கூட்டுப் பொறுப்பாகும். இதற்காகவே மாற்று சக்திகளின் பயன்பாட்டை அரசு தொடா்ந்து ஊக்குவித்து வருகிறது என்றாா்.

இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சாா்பில் 2024-25 நிதியாண்டில் 60 லட்சம் மரங்களை நட இலக்கு நிா்ணயித்து, அதைவிடக் கூடுதலாக 7 லட்சம் மரக்கன்றுகளை நடப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு பாலிவுட் நடிகர்களின் பூர்விக வீடுகளை மீட்டெடுக்க பாகிஸ்தான் அரசு ரூ.3.38 கோடி ஒதுக்கீடு!

பாலிவுட் நடிகர்கள் திலீப் குமார் மற்றும் ராஜ் கபூருக்கு சொந்தமாக பாகிஸ்தானில் உள்ள பூா்விக வீடுகளைப் பாதுகாக்க ரூ. 3 கோடிக்கும் அதிகமான தொகையை ஒதுக்க பாகிஸ்தான் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.வடமேற்கு பாக... மேலும் பார்க்க

ரூ.50 நாணயங்கள் அறிமுகம்? மத்திய அமைச்சகம் மறுப்பு!

ரூ.50 நாணயம் அறிமுகப்படுத்தும் திட்டம் பரிசீலனையில் இல்லை என்று தில்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.பார்வைக் குறைபாடுள்ள ரூ.50 தாள்களை கண்டறிய சிரமமாக இருப்பதாகக் கூறி, தில்லி உ... மேலும் பார்க்க

போர் விமான விபத்து: 2 விமானிகள் பலி; விசாரணைக்கு உத்தரவு!

ராஜஸ்தானில் போர் விமான விபத்தில் விமானிகள் இருவரும் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை தகவல் தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தின் பானுதா கிராமத்தில் இந்திய விமானப் படையின் ஜாகுவார் போர் வி... மேலும் பார்க்க

அருணாசலில் யானை தாக்கி முன்னாள் எம்எல்ஏ பலி!

அருணாசலப் பிரதேசத்தின் திராப் மாவட்டத்தில், யானை தாக்கியதில் அம்மாநிலத்தின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பலியாகியுள்ளார். திராம் மாவட்டத்தில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான காப்சென் ராஜ்குமார் (... மேலும் பார்க்க

நான் மகிழ்ச்சியாக இல்லை! அரசியல் வாழ்க்கை குறித்து மனம்திறந்த கங்கனா!

அரசியல் வாழ்க்கை குறித்து பாஜக எம்பி கங்கனா ரணாவத் வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தனது சர்ச்சை கருத்துகள் மூலம் எப்போதும் டிரெண்டிங்கில் இருக்கக்கூடிய நபர். இவர் ஹி... மேலும் பார்க்க

ஆப்பிள் சிஓஓ பதவிக்கு இந்திய வம்சாவளி நியமனம்! சம்பளம், பொறுப்புகள் என்னென்ன?

உலகளாவிய மொபைல்போன் சந்தையில் தனக்கென இடத்தை ஆப்பிள் நிறுவனம் பிடித்துள்ளது. இந்த நிலையில், அந்நிறுவனத்தின் உயர் பொறுப்பில் பணிபுரிய இந்திய வம்சாவளி நியமிக்கப்பட்டுள்ளார்.ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை இய... மேலும் பார்க்க