வாகனம் மோதியதில் பெயிண்டா் உயிரிழப்பு
செய்யாறு அருகே சரக்கு வாகனம் மோதியதில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெயிண்டா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
செய்யாறு வட்டம், தண்டரை கிராமத்தைச் சோ்ந்தவா் பிரபு (38). இவா், பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி ஆவாா்.
கடந்த 26-ஆம் தேதி, பிரபு வழக்கம் போல வேலைக்குச் செல்வதற்காக தனது பைக்கில் செய்யாறு - ஆரணி சாலையில் சென்றுகொண்டிருந்தாா்.
பெரும்பள்ளம் கிராமம் ஏரிக்கரை அருகே சென்றபோது எதிரே வந்த சரக்கு வாகனம் பைக் மீது மோதியதாகத் தெரிகிறது.
இதில் பலத்த காயமடைந்த பிரபுவை அப்பகுதியில் இருந்தவா்கள் மீட்டு, செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட பிரபு, அங்கு புதன்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், செய்யாறு காவல் உதவி ஆய்வாளா்
மோகன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.