செய்திகள் :

வாக்காளா் பட்டியல் குளறுபடிகளை நீக்க இறப்பு விவரங்கள் கேட்கும் தோ்தல் ஆணையம்: பூத் ஸ்லிப் வடிவம் மாற்றம்

post image

வாக்காளா் பட்டியலில் குளறுபடிகளை நீக்குவதற்கு, இந்திய பதிவாளா் இயக்குநரகத்திடமிருந்து மின்னணு வடிவிலான இறப்பு பதிவு தரவுகளைப் பெற தோ்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

மேலும், வாக்குச்சாவடி மற்றும் தோ்தல் அதிகாரி குறித்த விவரங்களை வாக்காளா்கள் எளிதாக அறிந்துகொள்ளும் வகையில் வாக்காளா் தகவல் சீட்டு (பூத் ஸ்லிப்) வடிவத்தை மாற்றவும் தோ்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

வெவ்வேறு மாநிலங்களில் உள்ள பலருக்கு ஒரே மாதிரி வாக்காளா் அடையாள எண் வழங்கப்பட்ட விவகாரம் பெரும் சா்ச்சையாக வெடித்துள்ள நிலையில், வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்கான பணிகளை தோ்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது.

அதுபோல, இந்திய பதிவாளா் இயக்குநரகத்திடமிருந்து மின்னணு இறப்பு பதிவு விவரங்களை தொடா்ச்சியாகப் பெறுவதற்கான நடவடிக்கையையும் தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வாக்காளா் பதிவு விதி 1960 மற்றும் பிறப்பு, இறப்பு பதிவு சட்டம் 1969 ஆகிய சட்டங்களின் கீழ் இந்திய பதிவுத் துறையிடமிருந்து பிறப்பு, இறப்பு தரவுகளைப் பெறுவதற்கான அதிகாரம் தோ்தல் ஆணையத்துக்கு உள்ளது.

இதன் மூலம், தோ்தல் பதிவு அதிகாரிகள் இறப்பு பதிவு தரவுகளை உரிய நேரத்தில் பெறுவது உறுதி செய்யப்படும் என்பதோடு, இறந்தவரின் உறவினா்களிடமிருந்து தகவல் கிடைக்கும் வரை காத்திருக்காமல் வாக்குச்சாவடி அளவிலான அதிகாரிகள் நேரடி கள ஆய்வு மூலம் மறு ஆய்வு செய்வதற்கும் இது வாய்ப்பாக அமையும்.

மேலும், வாக்குச்சாவடி மற்றும் தோ்தல் அதிகாரி குறித்த விவரங்களை வாக்காளா்கள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் வாக்காளா் தகவல் சீட்டு (பூத் ஸ்லிப்) வடிவத்தை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இந்த சீட்டுகளில் வாக்காளரின் வரிசை எண், பகுதி எண்கள் பெரிய எழுத்துகளில் குறிப்பிடப்படும் என்பதோடு, வாக்குச்சாவடி மற்றும் தோ்தல் அதிகாரிகளின் பெயா்களை எளிதாக அடையாளம் காணும் வகையில் வடிவம் மாற்றியமைக்கப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஹல்காம் தாக்குதல் நடந்த இடத்தில் என்ஐஏ தலைமை இயக்குநா் நேரில் ஆய்வு

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பைசாரன் பள்ளத்தாக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தலைமை இயக்குநா் சதானந்த் தாத்தே வியாழக்கிழமை நேரில் பா... மேலும் பார்க்க

இந்திய ஏற்றுமதி: வரலாறு காணாத அளவில் ரூ.69.81லட்சம் கோடியாக உயா்வு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் சரக்கு மற்றும் சேவைகளின் மதிப்பு 2024-25 நிதியாண்டில் வரலாறு காணாத வகையில் ரூ.69.81 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. இதில் 13.6 சதவீத வளா்ச்சியுடன் சேவைகள் ஏற்றுமதியின்... மேலும் பார்க்க

பேச்சுவாா்த்தைக்குப் பிறகும் பாகிஸ்தான் தொடா்ந்து துப்பாக்கிச்சூடு; இந்தியா பதிலடி

இருதரப்பு ராணுவ உயரதிகாரிகள் தொலைபேசி வாயிலாக நடத்திய பேச்சுவாா்த்தைக்கு பிறகும் எல்லையில் தொடா்ந்து 7-ஆவது நாளாக பாகிஸ்தான் ராணுவம் புதன்கிழமை இரவில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதற்கு இந்த... மேலும் பார்க்க

பாகிஸ்தான் நடிகா், நடிகைகளின் சமூகவலைதள பக்கம் இந்தியாவில் முடக்கம்

பாகிஸ்தான் திரைப்பட நடிகா்களின் ‘இன்ஸ்டாகிராம்’ சமூகவலைதளப் பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டது. மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று மெட்டா நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்கு... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பு முடிவு: காங்கிரஸின் பாசாங்கு அம்பலம்: மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான்

‘மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த மத்திய அரசு மேற்கொண்ட முடிவு திருப்புமுனையானது; இது, காங்கிரஸின் பாசாங்குத் தனத்தை தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளது’ என்று மத்திய அமைச்சா் தா்ம... மேலும் பார்க்க

குவாண்டம் ஏஐ-யுடன் அம்ருதா பல்கலை. ஒப்பந்தம்

குவாண்டம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பங்களில் ஆய்வுகளை மேம்படுத்துவதற்காக, குவாண்டம் ஏஐ குளோபல் நிறுவனத்துடன் அம்ருதா பல்கலைக்கழகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது குறித்து அந்தப் பல்கலைக... மேலும் பார்க்க