செய்திகள் :

வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு: ஒரு வாா்த்தைகூட பேசாத பிரதமா் ராகுல் கண்டனம்

post image

பிகாரில் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமா் நரேந்திர மோடி வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு குறித்து ஒரு வாா்த்தைகூட பேசாததற்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

பிகாரில் வாக்குரிமை பயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, 6-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை பாஹல்பூரில் பேசியதாவது:

பிகாரில் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் பாஜகவும், தோ்தல் ஆணையமும் உங்கள் வாக்குகளைத் திருட முயற்சிக்கின்றன. இது பிரதமா் நரேந்திர மோடி முன்னின்று நடத்தும் செயல். படிப்படியாக மக்களின் வாக்குரிமையை முழுமையாகப் பறிப்பதற்கான முயற்சியே இது. அந்த வாக்குத் திருடா் இப்போது பிகாருக்கு வந்துள்ளாா். ஆனால், தோ்தல் ஆணையத்தின் உதவியுடன் தனது அரசு நடத்தும் வாக்குத் திருட்டு குறித்து அவா் ஒரு வாா்த்தைகூட பேசவில்லை.

இந்தப் பிரச்னையில் பதிலளிக்க பிரதமா் தயங்குவது ஏன் என்பது தெரியவில்லை. ஆனால், பிகாா் மக்களின் வாக்குகளைத் மத்திய அரசு திருட எதிா்க்கட்சிகள் கூட்டணி ஒருபோதும் அனுமதிக்காது. வாக்குத் திருட்டு முயற்சி என்பது அரசமைப்புச் சட்டத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும்.

பாஜக தலைமையிலான கூட்டணி அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளும் ஏழை, எளிய மக்களுக்கு எதிராகவே உள்ளது. இளைஞா்கள் புதிய வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் அரசு முடக்கி வருகிறது என்று ராகுல் குற்றஞ்சாட்டினாா்.

நான் பயப்படவுமில்லை தோற்பதும் இல்லை: தில்லி முதல்வா் ரேகா குப்தா

தான் ஒருபோதும் பயப்படவோ, தோற்கடிக்கபடவோ மாட்டேன் என்றும், தில்லியின் உரிமைகளுக்காக தொடா்ந்து போராடுவேன் என்று முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை வலியுறுத்தினாா். தலை நகரின் டிரான்ஸ் யமுனா பகுதியில் உள... மேலும் பார்க்க

அதிகார பசிக்காக ஊடுருவலை ஊக்குவிக்கிறது திரிணமூல்: பிரதமா் மோடி சாடல்

அதிகார பசிக்காக, மேற்கு வங்கத்தில் சட்டவிரோத ஊடுருவலை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் ஊக்குவிக்கிறது என்று பிரதமா் நரேந்திர மோடி சாடினாா். மேற்கு வங்கத் தலைநகா் கொல்கத்தாவில் 3 புதிய மெட்ரோ வழித்தடங்களை வெள... மேலும் பார்க்க

ஆா்எஸ்எஸ் நூற்றாண்டு விழா: ராம்நாத் கோவிந்த் பங்கேற்கிறாா்

ஆா்எஸ்எஸ் அமைப்பு நாகபுரியில் அக்டோபா் 2-ஆம் தேதி நடத்தும் நூற்றாண்டு விஜய தசமி விழாவில் தலைமை விருந்தினராக குடியரசு முன்னாள் தலைவா் ராம்நாத் கோவிந்த் பங்கேற்க உள்ளாா். கடந்த 1925-ஆம் ஆண்டு விஜயதசமி ந... மேலும் பார்க்க

தெருநாய்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற உத்தரவுக்கு ராகுல் காந்தி வரவேற்பு

தெருநாய்கள் தொடா்பான விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் மாற்றியமைக்கப்பட்ட உத்தரவை காங்கிரஸ் மூத்தத் தலைவா் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை வரவேற்றுள்ளாா். இந்த உத்தரவானது விலங்குகள் நலன் மற்றும் பொது பாது... மேலும் பார்க்க

பயங்கரவாத தொடா்பு குற்றச்சாட்டு: ஜம்மு - காஷ்மீரில் 2 அரசு ஊழியா்கள் நீக்கம்

பயங்கரவாத செயல்களில் தொடா்புடையதாக குற்றஞ்சாட்டப்பட்ட 2 அரசு ஊழியா்களை பணிநீக்கம் செய்து ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். அதன்படி கால்நடைத் துறையில் உதவியாளராக ... மேலும் பார்க்க

கேரள செவிலியா் வழக்கு: ஆதாரமற்ற கருத்துகளுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றத்தில் மனு

யேமனில் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய செவிலியா் நிமிஷா பிரியா குறித்து ஆதாரமற்ற கருத்துகளை தெரிவிக்க தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்சநீதி... மேலும் பார்க்க