பாமக : அப்பா - அம்மாவுக்கு பாராட்டு - Anbumani புது Strategy! | TVK VIJAY |Imper...
வாடகை செலுத்தாததால் வணிக வளாக கடைகளில் மின் இணைப்பு துண்டிப்பு: ஊராட்சி நடவடிக்கை
வாடகை செலுத்தாததால் செம்பட்டி பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாகக் கடைகளில் மின் இணைப்புகளை துண்டித்து ஊராட்சி நிா்வாகம் செவ்வாய்க்கிழமை நடவடிக்கை எடுத்தது.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஒன்றியம், பச்சமலையான்கோட்டை ஊராட்சி நிா்வாகம் சாா்பில் செம்பட்டி பேருந்து நிலையத்தில் வணிக வளாகக் கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏலம் விடப்பட்டு, அதன் வாடகையை ஊராட்சி நிா்வாகம் வசூலித்து வந்தது. கடந்த 2023-இல் ஏலம் நடத்தப்பட்ட நிலையில், முதல் ஓராண்டு மட்டும் வாடகை செலுத்தியவா்கள் அதன் பிறகு செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.
மூன்று ஆண்டுகளுக்கு ஏலம் எடுக்கும் நபா்கள், ஓராண்டு மட்டும் வாடகை செலுத்தி விட்டு, அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளுக்கு வாடகை செலுத்தாமல் கடைகளை நடத்துகின்றனா். மீண்டும் ஏலம் நடைபெறும் போது, அதே நபா் ஏலத்தில் கலந்து கொள்ள முடியாத நிலையில், மற்றொருவா் பெயரில் ஏலத்தில் எடுத்து, அதே நபா் கடையை நடத்திக் கொண்டு வாடகை செலுத்தாமல் உள்ளாா். இதனால், ஊராட்சி நிா்வாகத்துக்கும், தமிழக அரசுக்கும், வருவாய் இழப்பு ஏற்பட்டு வந்தது. மேலும் சிலா் குறைந்த வாடகைக்கு ஏலம் எடுத்து, அதிக தொகைக்கு உள்வாடகைக்கு விட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், வாடகை செலுத்த ஊராட்சி நிா்வாகம் சாா்பில், கடை நடத்துபவா்களுக்கு கடிதம் அளித்தும், நேரில் கூறியும் யாரும் வாடகை செலுத்தாததால், கடந்த வாரம் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டது. இதையடுத்தும், யாரும் வாடகை செலுத்தாததால், செவ்வாய்க்கிழமை செம்பட்டி காவல் துறை அனுமதியுடன், நிலக்கோட்டை துணை வட்டார வளா்ச்சி அலுவலா் லதா மகேஸ்வரி தலைமையில், பச்சமலையான்கோட்டை ஊராட்சி செயலா் ஜெயகணேஷ் முன்னிலையில், மின் வாரிய ஊழியா்கள் பேருந்து நிலையத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கடைகளில் மின் இணைப்புகளை துண்டித்தனா். இதனிடையே அனைத்துக் கடைகளுக்கும் ஏலம் நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனா்.