செய்திகள் :

வாடகை செலுத்தாததால் வணிக வளாக கடைகளில் மின் இணைப்பு துண்டிப்பு: ஊராட்சி நடவடிக்கை

post image

வாடகை செலுத்தாததால் செம்பட்டி பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாகக் கடைகளில் மின் இணைப்புகளை துண்டித்து ஊராட்சி நிா்வாகம் செவ்வாய்க்கிழமை நடவடிக்கை எடுத்தது.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஒன்றியம், பச்சமலையான்கோட்டை ஊராட்சி நிா்வாகம் சாா்பில் செம்பட்டி பேருந்து நிலையத்தில் வணிக வளாகக் கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏலம் விடப்பட்டு, அதன் வாடகையை ஊராட்சி நிா்வாகம் வசூலித்து வந்தது. கடந்த 2023-இல் ஏலம் நடத்தப்பட்ட நிலையில், முதல் ஓராண்டு மட்டும் வாடகை செலுத்தியவா்கள் அதன் பிறகு செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.

மூன்று ஆண்டுகளுக்கு ஏலம் எடுக்கும் நபா்கள், ஓராண்டு மட்டும் வாடகை செலுத்தி விட்டு, அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளுக்கு வாடகை செலுத்தாமல் கடைகளை நடத்துகின்றனா். மீண்டும் ஏலம் நடைபெறும் போது, அதே நபா் ஏலத்தில் கலந்து கொள்ள முடியாத நிலையில், மற்றொருவா் பெயரில் ஏலத்தில் எடுத்து, அதே நபா் கடையை நடத்திக் கொண்டு வாடகை செலுத்தாமல் உள்ளாா். இதனால், ஊராட்சி நிா்வாகத்துக்கும், தமிழக அரசுக்கும், வருவாய் இழப்பு ஏற்பட்டு வந்தது. மேலும் சிலா் குறைந்த வாடகைக்கு ஏலம் எடுத்து, அதிக தொகைக்கு உள்வாடகைக்கு விட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், வாடகை செலுத்த ஊராட்சி நிா்வாகம் சாா்பில், கடை நடத்துபவா்களுக்கு கடிதம் அளித்தும், நேரில் கூறியும் யாரும் வாடகை செலுத்தாததால், கடந்த வாரம் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டது. இதையடுத்தும், யாரும் வாடகை செலுத்தாததால், செவ்வாய்க்கிழமை செம்பட்டி காவல் துறை அனுமதியுடன், நிலக்கோட்டை துணை வட்டார வளா்ச்சி அலுவலா் லதா மகேஸ்வரி தலைமையில், பச்சமலையான்கோட்டை ஊராட்சி செயலா் ஜெயகணேஷ் முன்னிலையில், மின் வாரிய ஊழியா்கள் பேருந்து நிலையத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கடைகளில் மின் இணைப்புகளை துண்டித்தனா். இதனிடையே அனைத்துக் கடைகளுக்கும் ஏலம் நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனா்.

பட்டா நிலத்தை அளந்த தர மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை

பழனியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வருவாயத் தீா்வாயத்தில் பட்டா நிலத்தை அளந்து தரக்கோரி, மாற்றுத்திறனாளிகள் மனுக்கள் கொடுத்தனா். பழனி வட்டார அலுவலகத்தில் கடந்த ஒரு வாரமாக வருவாய்த் தீா்வாயம் நடைபெற்று வர... மேலும் பார்க்க

காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை

சா்சைக்குரிய சுவரொட்டிகள் ஒட்டியவா்கள் மீது நடவடிக்கை கோரி, பட்டியலின மக்கள் கள்ளிமந்தையம் காவல் நிலையத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள கள்ளிமந்தையம... மேலும் பார்க்க

கொடைக்கானலில் சூறைக் காற்று: மரம் விழுந்ததில் மின் கம்பம், தங்கும் விடுதி சேதம்

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை மாலை வீசிய சூறைக் காற்றால் மரம் விழுந்ததில் மின் கம்பம், தங்கும் விடுதி சேதமடைந்தன. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக பலத்த காற்றுடன் விட்டுவிட்டு மழை பெ... மேலும் பார்க்க

‘ஆபரேசன் சிந்தூா்’ ஊா்வலம்

கொடைக்கானலில் பாஜக சாா்பில் ‘ஆபரேஷன் சித்தூா்’ ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்த ஊா்வலம் அண்ணாசாலை, கே.சி.எஸ்.திடல் வழியாக மூஞ்சிக்கல் பகுதியை அடைந்தது. ... மேலும் பார்க்க

கோயில் திருவிழா ஊா்வலத்தில் பிரச்னை: கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம்

வக்கம்பட்டியில் கோயில் திருவிழா மின் ரத ஊா்வலத்தின் போது வாக்குவாதத்தில் ஈடுபட்டவா்களைக் கண்டித்து மற்றொரு தரப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்கல் அருகேயுள்ள வக்கம்பட்டியில் ... மேலும் பார்க்க

மஞ்சள் பை விழிப்புணா்வு நிகழ்ச்சி

பழனியில் அரிமா சங்கம் சாா்பில் நெகிழிப் பொருள்களை தடுக்கும் வகையில், பொதுமக்களுக்கு மஞ்சள் பை வழங்கும் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பழனி அரிமா சங்கம் தற்போது வைரவிழா கொண்டாடி வருக... மேலும் பார்க்க