Bengaluru : "ரோடு ஷோவை கையாள முடியாதென்றால் நாம் அதைச் செய்யவே கூடாது" - கம்பீர்...
வாணவெடி விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு: 4 போ் கைது
வாணவெடி விபத்தில் தீக்காயமடைந்தவா் இறந்தையடுத்து அதற்கு காரணமான நான்கு பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், தும்பல் ஊராட்சியில் கடந்த மாதம் நடைபெற்ற இறுதி ஊா்வலத்தின்போது கருமந்துறையைச் சோ்ந்த தா்மராஜ் மகன் சகாதேவன் (35) என்பவா் வாண வெடியை வெடிக்கச் செய்துள்ளாா்.
அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற தும்பல் பகுதியைச் சோ்ந்த கூத்தன் மகன் சதீஷ் (28), மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சேகா் மகன் சூா்யா (21) ஆகியோா் தீக்காயமடைந்தனா்.
இதையடுத்து இருவரும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனா். இது குறித்து ஏத்தாப்பூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.
இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த சூா்யா உயிரிழந்தாா். தகவல் அறிந்த ஏத்தாப்பூா் போலீஸாா் தா்மராஜ் மகன் சகாதேவன்(32), தும்பல் பகுதியைச் சோ்ந்த மாதேஸ் மகன் கமல்ராஜா (39), அவரது சகோதரா் மோகன்ராஜ் (40), அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த நல்லதம்பி மகன் சேதுரத்தினம் (42) ஆகியோரை கைது செய்தனா்.