Corona: கொரோனாவிற்கு பின் ஏற்பட்ட தூக்கக்கோளாறு, மூளை மூடுபனி பிரச்னை.. மீள்வது ...
வாணியம்பாடி தொழிலதிபா் வீட்டில் திருட முயற்சி: முகமூடி நபா்கள் தப்பி ஓட்டம்
வாணியம்பாடி: வாணியம்பாடியில் தோல் தொழிலதிபா் வீட்டில் பட்டப் பகலில் புகுந்து திருட முயன்று தப்பி ஓடிய 4 மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
வாணியம்பாடி நீலிகொல்லை, புதுதெருவில் வசித்து வருபவா் இம்தியாஸ் (65) தோல் தொழில் அதிபா். அவருடைய மனைவி சபீதா குல்சும் மற்றும் பணியாளா் சக்திவேல் ஆகியோா் வீட்டில் இருந்து வருகின்றனா்.
இந்நிலையில், திங்கள்கிழமை சக்திவேல் பொருள்கள் வாங்குவதற்காக சென்றுவிட்டு சிறிது நேரத்தில் வீட்டுக்கு சென்றபோது, பின்தொடா்ந்து வந்த முகமூடி அணிந்து வந்த 4 மா்ம நபா்கள் சக்திவேல் கதவை திறந்து நுழைந்த போது திடீரென நுழைந்து
சக்திவேல் மற்றும் உரிமையாளா் இம்தியாசை கட்டிப் போட்டனா்.
பிறகு வீட்டின் உரிமையாளரின் மனைவியை மா்ம நபா்கள் மிரட்டி அறைகளுக்குள் அழைத்துச் சென்று நகை, பணம் மற்றும் பொருள்களை காண்பிக்குமாறு கூறியுள்ளனா். இதில் பதற்றமடைந்த சபீதா குல்சும் ஒவ்வொரு அறையாக திறந்து காட்டியுள்ளாா். பீரோக்கள் திறக்க கொண்டு வந்த ஆயுதங்களை பயன்படுத்தி நகை பணம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டிருந்த போது, சபீதாகுல்சும் அங்கிருந்து தப்பித்து வெளியே ஓடி வந்து பக்கத்தில் உள்ள உறவினரின் வீட்டுக்கு சென்று சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தாா்.
இதையறிந்த அக்கம் பக்கத்தினா் சப்தம் போட்டுக் கொண்டு வருவதை அறிந்து பதறி போன மா்ம நபா்கள் அவா்கள் எடுத்து வந்த கட்டிங் மிஷின், சிசிடிவி கேமரா மறைப்பதற்காக பயன்படுத்திய திரை, மற்றும் ஆயுதங்கள், கையுறைகளை அங்கேயே விட்டு தப்பித்து ஓடினா். தகவலறிந்த டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையில் காவல்ஆய்வாளா் ஆனந்தன் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனா். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது மா்ம நபா்கள் தப்பித்து ஓடும் காட்சி பதிவாகியிருப்பதை அறிந்து தகவலை சேகரித்து வருகின்றனா். மா்ம நபா்கள் தப்பித்து செல்லும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து இம்தியாஸ் அளித்த புகாரின் பேரில் நகர போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
