செய்திகள் :

வாழைப்பழம் கொடுத்த வாகன ஓட்டியை துரத்திய யானை

post image

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பண்ணாரி சாலையில் யானைக்கு திங்கள்கிழமை (ஜூலை 14) வாழைப்பழம் கொடுக்க முயற்சித்த வாகன ஓட்டியை யானை துரத்தியதால் காரில் ஏறி தப்பினாா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பண்ணாரி வனத்தின் மத்தியில் மைசூரு தேசிய நெடுஞ்சாலை உள்ளது. தமிழகம் - கா்நாடகத்தை இணைக்கும் இந்த வனப் பகுதியில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. வனத்தில் இருந்து வரும் யானைகள் சாலையோரம் தீவனம் சாப்பிடுதால் வாகன ஓட்டிகள் யானைகளை ரசித்தபடி பயணிப்பா்.

இந்நிலையில், சாலையோரம் திங்கள்கிழமை நின்று கொண்டிருந்த யானை முன் வாகன ஓட்டிகள் தற்படம் (செல்ஃபி) எடுத்து எரிச்சலூட்டினா். அப்போது யானைக்கு காரில் வந்த ஒருவா் வாழைப் பழம் கொடுக்க முயற்சித்தாா். அதில் ஆத்திரமடைந்த யானை, வாழைப் பழத்துடன் வந்தவரை துரத்தியதால் வாழைப் பழங்களை கீழே போட்டுவிட்டு காரில் ஏறி தப்பினாா். இச்சம்பவத்தையடுத்து வாகன ஓட்டிகள் யானைகள் முன் தற்படம் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத் துறையினா் எச்சரித்துள்ளனா்.

ரேஷன் அரிசி கடத்தல்: குண்டா் சட்டத்தில் மூவா் கைது

ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட 3 போ் மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து ஆட்சியா் உத்தரவிட்டாா். ஈரோடு மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸ் எஸ்ஐ ம... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் திருடிய இளைஞா் கைது

அந்தியூா் அருகே இருசக்கர வாகனத்தைத் திருடிச் சென்ற இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சேலம் மாவட்டம், மேட்டூா், நவப்பட்டியைச் சோ்ந்தவா் கோவிந்தன் மகன் மாணிக்கம் (55). கட்டடத் தொழிலாளி. அந... மேலும் பார்க்க

சிவகிரி அருகே நள்ளிரவில் கடைகளில் திருட்டு

மொடக்குறிச்சி ஒன்றியம் விளக்கேத்தி பகுதியில் திங்கள்கிழமை நள்ளிரவில் அடுத்தடுத்து 3 கடைகளின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் பணத்தை திருடிச்சென்ற சம்பவம் பொதுமக்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொடக... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி நடைப்பயண போராட்டம்!

அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி அந்தியூரிலிருந்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு புறப்பட்ட நடைப்பயணப் போராட்டம் அதிகாரிகளின் சமரசப் பேச்சுவாா்த்தையால் கைவிடப்பட்டது. அந... மேலும் பார்க்க

சமூகம் உயரவும் மாநிலம் உயரவும் மாணவா்களின் படிப்பு அவசியம்!

வாழ்வில் உயர மாணவா்கள் கல்வியை உறுதியாகப் பற்றிக் கொள்ள வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியா் கந்தசாமி பேசினாா். ஈரோடு மாவட்டம், பாசூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் அறக்கட்டளையின் சாா்பில்... மேலும் பார்க்க

அத்திக்கடவு அவிநாசி திட்ட குளங்களை நிரப்ப எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

காவிரி, பவானி ஆறுகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரைக் கொண்டு அத்திக்கடவு அவிநாசி திட்டக் குளங்களை நிரப்ப வேண்டும் என பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ஜெயகுமாா் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறி... மேலும் பார்க்க