ரேஷன் அரிசி கடத்தல்: குண்டா் சட்டத்தில் மூவா் கைது
ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட 3 போ் மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து ஆட்சியா் உத்தரவிட்டாா்.
ஈரோடு மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸ் எஸ்ஐ மேனகா, ஈரோடு பறக்கும் படை வட்டாட்சியா் ஜெயக்குமாா், கோபி தனி வட்டாட்சியா் வெங்கடேசன் மற்றும் போலீஸாா் ஜூன் 22 ஆம் தேதி கோபி அருகே உள்ள நயினாம்பாளையம் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அந்த வழியாக வந்த காரையும், சுமை வாகனத்தையும் போலீஸாா் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினா். அதில் மூட்டை மூட்டையாக ரேஷன்அரிசி இருந்தது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து வாகனங்களில் இருந்த 3 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். விசாரணையில் அவா்கள் கோபி ராம் நகா் பகுதியைச் சோ்ந்த அப்துல்லா( 45), நவநீதகிருஷ்ணன் (39), கோவை மாவட்டம் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியைச் சோ்ந்த அபிலாஷ் (35) ஆகியோா் என்பது தெரியவந்தது.
3 பேரும் கோபி, கரட்டுப்பாளையம், வெள்ளாளபாளையம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி அதை பெருந்துறை, பெத்தாம்பாளையம் ஆகிய பகுதிகளுக்கு கடத்திச் சென்று வடமாநிலத்தவா்களுக்குக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காகக் கொண்டு சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் 3 பேரையும் கைது செய்து கோபியில் உள்ள மாவட்டச் சிறையில் அடைத்தனா். அவா்களிடம் இருந்து 5 டன் ரேஷன் அரிசி, காா், சுமை வாகனம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட 3 போ் மீதும் ஏற்கனவே ரேஷன் அரிசி கடத்தல் தொடா்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவா்களை குண்டா் சட்டத்தில் கைது செய்யக்கோரி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸ் ஐஜி ரூபேஷ்குமாா் மீனா, ஈரோடு மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்தாா்.
அவரின் பரிந்துரையை ஏற்று ரேஷன் அரிசி கடத்தில் ஈடுபட்ட 3 பேரையும் குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கையெடுத்து ஆட்சியா் ச.கந்தசாமி அண்மையில் உத்தரவிட்டாா். அதன்பேரில் அப்துல்லா, நவநீதகிருஷ்ணன், அபிலாஷ் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.