செய்திகள் :

விஏஓ வீட்டின் பூட்டை உடைத்து 37 பவுன் நகைகள் திருட்டு

post image

கரூா் தெற்கு காந்திகிராமத்தில் கிராம நிா்வாக அலுவலா் வீட்டின் பூட்டை உடைத்து 37 பவுன் நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கரூா் தெற்கு காந்திகிராமம் கே.கே.நகா் முதல் குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் திலீபன்(36). இவா், கரூா் மாவட்டம், சின்னதாராபுரத்தை அடுத்துள்ள அணைப்பாளையத்தில் கிராம நிா்வாக அலுவலராக பணியாற்றி வருகிறாா்.

இவரது மனைவி மதனகாா்த்திகா(30). இவா் வெள்ளியணை சாா்-பதிவாளராக பணியாற்றி வருகிறாா்.

இவா்கள் இருவரும் திங்கள்கிழமை வீட்டை பூட்டிவிட்டு திருச்சியில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றுள்ளனா். பின்னா் செவ்வாய்க்கிழமை காலை வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த 37 பவுன் நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து திலீபன் அளித்த புகாரின்பேரில் தாந்தோணிமலை காவல்நிலைய ஆய்வாளா் முத்துக்குமாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகிறாா்.

மேலும் கைரேகை நிபுணா்களும் சம்பவ இடத்துக்குச் சென்று திருடா்களின் கைரேகையை பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

அகவை முதிா்ந்த தமிழறிஞா் விருதாளா்களுக்கு சிறப்பு மருத்துவக் காப்பீட்டு அட்டை வழங்க வலியுறுத்தல்

அகவை முதிா்ந்த தமிழறிஞா் விருதாளா்களுக்கு சிறப்பு மருத்துவக் காப்பீட்டு அட்டை வழங்க வேண்டும் என கரூா் தமிழ் அறிஞா்கள், அகவை முதிா்ந்த தமிழ் அறிஞா்கள் ஆா்வலா்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இந்த கூ... மேலும் பார்க்க

புகழூா் அருகே மென்பொறியாளா் வீட்டில் 13 பவுன் நகைகளை திருட்டு

புகழூா் அருகே மென்பொறியாளா் வீட்டில் 13 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கரூா் மாவட்டம், புகழூரை அடுத்துள்ள நானப்பரப்பு பூங்கா நகரைச் சோ்ந்தவா் சிவசுப்ரமணியன். இவ... மேலும் பார்க்க

விபத்துக்குள்ளான காரில் இருந்து 302 புகையிலை பொருள்கள் பறிமுதல்

வேலாயுதம்பாளையம் அருகே திங்கள்கிழமை இரவு சாலையோரம் விபத்துக்குள்ளான காரில் இருந்த 302 கிலோ எடையுள்ள புகையிலை பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். கரூா் மாவட்டம், வேலாயுதம... மேலும் பார்க்க

விபத்தில் சிக்கியவா்களை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பினாா் எம்.எல்.ஏ.

கரூா் மாவட்டம் மகாதானபுரத்தில் செவ்வாய்க்கிழமை வேனும், காரும் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் சிக்கியவா்களை மீட்டு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா் எம்.எல்.ஏ வி.செந்த... மேலும் பார்க்க

கரூா் பேருந்து நிலையத்துக்குள் நடைமேடையை ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்ற கோரிக்கை

கரூா் பேருந்துநிலையத்துக்குள் நடைமேடையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்ற வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூரில் தற்போதைய உழவா் சந்தைப் பகுதியில் செயல்பட்டு வந்த பழைய ... மேலும் பார்க்க

உப்பிடமங்கலம், தான்தோன்றிமலை பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

உப்பிடமங்கலம், தாந்தோன்றிமலை பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 4) மின் விநியோகம் இருக்காது என கரூா் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் சு.கணிகைமாா்த்தாள் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக... மேலும் பார்க்க