செய்திகள் :

விகடன் இணையதள முடக்கம்: ``அதிகாரத்தின் வெட்கக்கேடான அத்துமீறல்" - Editors Guild of India கண்டனம்

post image

அமெரிக்காவிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் மனிதாபிமானமற்ற முறையில் 20 மணி நேரத்துக்கும் மேலாக கை, கால்களில் விலங்கிடப்பட்டு இந்தியா அழைத்துவரப்பட்டனர். அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி இதுகுறித்து எதுவும் பேசியதாக தெரியவில்லை. இதை விமர்சித்து விகடன் வலைப்பக்கத்தில் கார்ட்டூன் ஒன்று வெளியிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ.க அரசு, எந்த முன்னறிவிப்புமின்றி, விகடன் வலைப்பக்கத்தை முடக்கியிருக்கிறது. மத்திய அரசின் இந்த செயல்பாடு இந்திய ஊடகவியலாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

அமெரிக்கா அராஜகம்!

கருத்துரிமை, ஊடகச் சுதந்திரம் பறிக்கப்படுவதாக பல்வேறு தரப்பிலிருந்து விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் வந்துக்கொண்டே இருக்கிறது. இந்த நிலையில், பத்திரிக்கை ஆசிரியர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் பத்திரிகைச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படும் Editors Guild of India அமைப்பு மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்திருக்கிறது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், ``பிரதமரை சித்தரிக்கும் ஒரு கார்ட்டூனை வெளியிட்டதற்காக, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால், எந்தவொரு உரிய நடைமுறையும் இல்லாமல், தமிழ் பத்திரிகை இணையதளமான Vikatan.com சமீபத்தில் முடக்கப்பட்டதில் இந்தியப் பத்திரிக்கைகள் ஆசிரியர் சங்கம் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளது. பத்திரிக்கைகளில் வரும் கார்ட்டூன்கள் எப்போதும் ஒரு சட்டபூர்வமான வழிமுறையாகவே இருந்து வருகிறது. ஆனால், அதற்காக விகடன் வலைத்தளத்தை திடீரென முடக்குவது அதிகாரிகளின், அதிகாரத்தின் வெட்கக்கேடான அத்துமீறலாகும்.

Editors Guild of India

படைப்பின் பின்னணியில் உள்ள கார்ட்டூனிஸ்ட் சமூக ஊடகங்களில் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டு, கொலை மிரட்டல்கள்கள் அனுப்பப்படுவதை அறிந்து வேதனையடைகிறோம். ஒரு அரசியல் கட்சியின் மாநிலத் தலைவரின் புகாரின் பேரில், எந்தவித முன்னறிவிப்புகள் இல்லாமல், ஆனந்த விகடனுக்கு - நியாயமான விசாரணைக்கு எந்த வாய்ப்பும் வழங்கப்படாமல் செயல்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

வலைப்பக்கம் தன்னிச்சையாக முடக்கப்பட்டதற்குப் பின்னரே உரிய நடைமுறை தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த முழு நிகழ்வும் அடாவடித்தனத்தையே வெளிப்படுத்துகிறது. நாட்டில் ஊடக சுதந்திரம் குறித்த கவலைகள் வளர்ந்து வருகிறது. வலைத்தளத்தை முடக்குவது வெளிப்படைத்தன்மையை மதிக்கும் இந்தியாவின் ஜனநாயக மரபுகளுக்கு இழுக்கு." எனக் குறிப்பிட்டிருக்கிறது.

``உத்தரகாண்டில் வெளிமாநிலத்தவர்கள் விவசாய நிலம் வாங்கத் தடை'' - பா.ஜ.க அரசு முடிவு!

நாட்டில் சிக்கிம், காஷ்மீர் போன்ற மாநிலங்களில் வெளிமாநிலத்தவர்கள் நிலம் வாங்க தடை இருந்தது. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு சலுகை விலக்கிக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, இப்போது அந்த மாநிலத்தில... மேலும் பார்க்க

விகடன் இணையதளம் முடக்கம்: ``பாசிச ஊடுருவலின் அடையாளம்" -ஷாஜி என்.கருண் கண்டனம்

அமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறியதாக நூற்றுக்கணக்கான இந்தியர்களை, அந்நாட்டு ராணுவம் கைகால்களில் விலங்கிட்டு சொந்த இந்தியாவுக்கு திருப்பியனுப்பிய விவகாரத்தில், பிரதமர் மோடி எதுவும் கூறாமல் அமைதிய... மேலும் பார்க்க

``பாக்கெட்டில் இருந்து காசு கேட்கவில்லை” -மோடி, நிர்மலா சீதாராமனை சாடிய காங்கிரஸ் எம்.பி.!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் சேர்க்கைக்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட மயிலாடுதுறை சுதா எம்.பி, செய்தியாளர்களிடம் கூறியதாவது, "மத்திய பட்ஜெட்டில், தம... மேலும் பார்க்க

``Elon Musk -ஐ விட புத்திசாலியான ஆளை தேடினேன்.." - ட்ரம்ப் கூறியதென்ன?

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அரசு செயல்திறன் துறைக்கு (Department of Government Efficiency - DOGE) தலைமைத்தாங்க உலகப் பணக்காரரான எலான் மஸ்கை அழைத்தது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். ஃபாக்ஸ் நி... மேலும் பார்க்க

US: கை, கால்களில் விலங்கிடும் அமெரிக்கா - வெள்ளை மாளிகை வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ; மஸ்க் ரியாக்‌ஷன்

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதில் முக்கியமானது, அமெரிக்காவில் சட்டவிரோதக் குடியேறிகளை நாட்டை விட்டு வெளியேற்றும் அறிவிப்பு. மெக்சிகோ... மேலும் பார்க்க

நாமக்கல்: குடியிருப்பு பகுதியில் நடைபாதையை அடைத்த இன்ஜினியர் -நடவடிக்கை எடுத்த ஆட்சியர்!

நாமக்கல் மாநகராட்சி 19 -வது வார்டில் கலைவாணர் நகர் உள்ளது. இங்கு அரசின் இலவச வீட்டு மனை பட்டா பெற்று 33 குடும்பத்தினர் கடந்த 20 ஆண்டுக்கு மேலாக வசித்து வருகின்றனர் இவர்கள் குடியிருப்பில் இருந்து நரசிம... மேலும் பார்க்க