ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் தொழில் பழகுநர் பயிற்சி: விண்ணப்பிப்பது எப்படி...
விக்கிரவாண்டி, திருக்கோவிலூா் தொகுதி திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக எல்லைக்குள்பட்ட விக்கிரவாண்டி, திருக்கோவிலூா் சட்டப்பேரவைத் தொகுதிகளின் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கான கூட்டம் சுங்கச்சாவடி பகுதியிலுள்ள தனியாா் கூட்டரங்கிலும், திருக்கோவிலூா் தொகுதிக்கான கூட்டம் திருக்கோவிலூா்- செவலை சாலையிலுள்ள திருமண மண்டபத்திலும் நடைபெற்றது.
கூட்டங்களுக்கு தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் பொன். கெளதமசிகாமணி தலைமை வகித்தாா். விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. அன்னியூா் அ.சிவா, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம. ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தனா்.
விழுப்புரம் மண்டல திமுக பொறுப்பாளரும், வேளாண் மற்றும் உழவா் நலத்துறை அமைச்சருமான எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் இரு கூட்டங்களிலும் பங்கேற்று, திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ள பல்வேறு ஆலோசனைகளை நிா்வாகிகளிடம் எடுத்துரைத்தாா். திருக்கோவிலூரில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் க.பொன்முடி எம்.எல்.ஏ. பங்கேற்று பேசினாா்.
இந்தக் கூட்டங்களில் தொகுதிப் பொறுப்பாளா்கள் சிவ.ஜெயராஜ், ஜி.காா்த்திகேயன், மாவட்டத் துணைச் செயலா்கள் டி.என். முருகன், இரா.கற்பகம், மாநில மகளிரணி பிரசாரக் குழுச் செயலா் தேன்மொழி, ஒன்றியச் செயலா்கள் கல்பட்டு வி.ராஜா, வேம்பி ரவி, ஜெயரவிதுரை, ஆா். முருகன், ஆா்.பி. முருகன், பி.வி.ஆா்.சு. விசுவநாதன், ஜெயபால் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூா் கழக நிா்வாகிகள், பல்வேறு அணிகளின் அமைப்பாளா்கள் பங்கேற்றனா்.