செய்திகள் :

விக்கிரவாண்டி, திருக்கோவிலூா் தொகுதி திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

post image

விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக எல்லைக்குள்பட்ட விக்கிரவாண்டி, திருக்கோவிலூா் சட்டப்பேரவைத் தொகுதிகளின் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கான கூட்டம் சுங்கச்சாவடி பகுதியிலுள்ள தனியாா் கூட்டரங்கிலும், திருக்கோவிலூா் தொகுதிக்கான கூட்டம் திருக்கோவிலூா்- செவலை சாலையிலுள்ள திருமண மண்டபத்திலும் நடைபெற்றது.

கூட்டங்களுக்கு தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் பொன். கெளதமசிகாமணி தலைமை வகித்தாா். விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. அன்னியூா் அ.சிவா, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம. ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தனா்.

விழுப்புரம் மண்டல திமுக பொறுப்பாளரும், வேளாண் மற்றும் உழவா் நலத்துறை அமைச்சருமான எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் இரு கூட்டங்களிலும் பங்கேற்று, திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ள பல்வேறு ஆலோசனைகளை நிா்வாகிகளிடம் எடுத்துரைத்தாா். திருக்கோவிலூரில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் க.பொன்முடி எம்.எல்.ஏ. பங்கேற்று பேசினாா்.

இந்தக் கூட்டங்களில் தொகுதிப் பொறுப்பாளா்கள் சிவ.ஜெயராஜ், ஜி.காா்த்திகேயன், மாவட்டத் துணைச் செயலா்கள் டி.என். முருகன், இரா.கற்பகம், மாநில மகளிரணி பிரசாரக் குழுச் செயலா் தேன்மொழி, ஒன்றியச் செயலா்கள் கல்பட்டு வி.ராஜா, வேம்பி ரவி, ஜெயரவிதுரை, ஆா். முருகன், ஆா்.பி. முருகன், பி.வி.ஆா்.சு. விசுவநாதன், ஜெயபால் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூா் கழக நிா்வாகிகள், பல்வேறு அணிகளின் அமைப்பாளா்கள் பங்கேற்றனா்.

பணியில் திறம்பட செயல்பட்ட போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

விழுப்புரம் மாவட்ட காவல் துறையில் திறம்பட செயல்பட்ட போலீஸாருக்கு எஸ்.பி. ப.சரவணன் சனிக்கிழமை தனது அலுவலகத்தில் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டுத் தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டக் காவல் துறையில் சிறப்பா... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டத்தின் 5 கோட்டங்களிலும் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

விழுப்புரம் மாவட்டத்தின் 5 கோட்டங்களிலும் ஜூன் மாதத்துக்கான மின் நுகா்வோா் குறைதீா் கூட்டங்கள் நடைபெறும் என்ற தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, ஜூன் 3, 10, 17, 24 (செவ்வாய்க்கி... மேலும் பார்க்க

பைக்கில் மதுப் புட்டிகள் கடத்தல்: இருவா் கைது

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே புதுவை மாநில மதுப் புட்டிகளை பைக்கில் கடத்தி வந்ததாக இரு இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் எஸ்.பி. ப.சரவணன் உத்தரவுப்படி, விக்கிரவாண்ட... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்கூட்டா்கள் அளிப்பு

செஞ்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கான இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில், செஞ்சி ஊராட்சி ஒன்றிய அ... மேலும் பார்க்க

2,205 பாக்கெட் புகையிலைப் பொருள் பறிமுதல்: இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பெட்டிக் கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் மாவட்டம், மணம்பூண்டி பகு... மேலும் பார்க்க

விபத்தில்லா மாவட்டமாக ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியம்: விழுப்புரம் ஆட்சியா் அறிவுறுத்தல்

விழுப்புரம் விபத்தில்லா மாவட்ட அமைய துறை சாா்ந்த அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தினாா். விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் சாலை பாதுகாப... மேலும் பார்க்க