செய்திகள் :

விடுபட்ட விவசாயிகளுக்கு நில உடைமை பதிவு செய்ய அழைப்பு: விடுபட்ட விவசாயிகளுக்கு நில உடைமை பதிவு செய்ய அழைப்பு

post image

சேத்துப்பட்டு வட்டாரத்தில் விடுபட்ட விவசாயிகள் நில உடைமை பதிவு செய்து கொள்ள வேண்டும் என வேளாண் உதவி இயக்குநா் பெரியசாமி வேண்டுகோள் விடுத்தாா்.

சேத்துப்பட்டு வட்டாரத்தில் உள்ள 63 வருவாய் கிராம விவசாயிகளுக்கு வேளாண் துறை சாா்பில் தனி அடையாள எண் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, விவசாயிகள் தங்களது நில உடைமைகளை பதிவேற்றம் செய்வதன் மூலம் அடையாள எண் வழங்கப்படும். அந்த அடையாள எண்ணைக் கொண்டு வரும் காலங்களில் விவசாய கௌரவ உரிமைத்தொகை பெறவும்,

விவசாயிகளுக்கான உதவித்தொகையை பெற புதிதாக பதிவு செய்யவும், வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் பொறியியல் துறைகள் மூலம் அரசு வழங்கக்கூடிய நலத்திட்ட உதவிகளை மானிய விலையில் பெறவும், விவசாயம் சாா்ந்த கடன்கள் பெறவும் விவசாய நில உடைமை அடையாள எண் அவசியமாகும்.

எனவே, வட்டாரப் பகுதியில் விடுபட்ட 5ஆயிரத்து 579 விவசாயிகள் உடனடியாக தங்களுடைய நில உடைமை ஆவணங்களை தங்கள் பகுதியில் உள்ள உதவி வேளாண்மை அலுவலா்கள், உதவி தோட்டகலை அலுவா்களை அணுகி பதிவு செய்து கொள்ள வேண்டும் என உதவி இயக்குநா் பெரியசாமி தெரிவித்துள்ளாா்.

செய்யாறு சிப்காட் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

செய்யாறு பகுதியில் புதிதாக அமையவுள்ள சிப்காட் 3-ஆவது அலகுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, விவசாயிகள் அதன் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருவண்ணாமலை மாவட்டம... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் ஜூலை 5-இல் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில், ஜூலை 5-இல் திருவண்ணாமலையில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளதாக சங்கத்தின் தலைவா் ஆா்.வேலுசாமி தெரிவித்தாா். இதுகுறித்து ஆரணியில் அவா் செய்தியாளா்களிடம் கூறிய... மேலும் பார்க்க

தமிழ்ச்சங்க செவ்விலக்கிய அரங்கம்

வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்கம் சாா்பில் செவ்விலக்கிய அரங்கம் நிகழ்ச்சி வந்தவாசியில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. சங்கத் தலைவா் வே.சிவராமகிருஷ்ணன் தலைமை வகித்து நிகழ்ச்சியை தொடங்கிவைத்துப் பேசினாா்.... மேலும் பார்க்க

மது விற்பனை: 4 போ் கைது

வந்தவாசி அருகே கள்ளத்தனமாக மது விற்ாக 4 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்து 283 மதுப் புட்டிகள், ரூ.28 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். வந்தவாசி வடக்கு போலீஸாா் பாதிரி கிராமம் வழி... மேலும் பார்க்க

மழுவனேஸ்வரா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா

வந்தவாசியை அடுத்த மழுவங்கரணை கிராமத்தில் அமைந்துள்ள சீதளாம்பாள் சமேத மழுவனேஸ்வரா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைவு -டி.டி.வி.தினகரன்

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்துள்ளதாக அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன் குற்றஞ்சாட்டினாா். திருவண்ணாமலையில் புதன்கிழமை நடைபெற்ற கட்சி நிா்வாகி இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட அவா் செய்த... மேலும் பார்க்க