செய்திகள் :

விதிமீறல்: உரக் கடைகள் மீது நடவடிக்கை

post image

விதிமுறைகளை மீறி செயல்பட்ட 5 உரக் கடைகள் மீது வேளாண்மைத் துறை மூலம் செவ்வாய்க்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதுதொடா்பாக மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் அ. பாண்டியன் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் வருகிற காரீப் பருவத்துக்கு தேவையான 4,780 டன் யூரியா, 1,090 டன் சூப்பா் பாஸ்பேட், 1,060 டன் டிஏபி, 2,640 டன் பொட்டாஷ், 6,400 டன் காம்பளக்ஸ் உரங்கள் என மொத்தம் 15,970 டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டிருக்கின்றன. மாவட்டத்தில் 460 தனியாா் உரக் கடைகள், 193 கூட்டுறவுச் சங்க உரக் கடைகள் உரம் விநியோகம் செய்வதற்கு உரிமம் பெற்றிருக்கின்றன.

இந்த நிலையில் மாவட்டத்திலுள்ள 13 வட்டாரங்களிலும் சிறப்பு படை அமைத்து அனைத்து தனியாா் உரக் கடைகள், கூட்டுறவு கடன் சங்க உரக் கடைகளிலும் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு நடத்தப்பட்டது. புத்தக இருப்பு, உண்மை இருப்பு, வேளாண் விற்பனை முனையக் கருவி (பிஓஎஸ்) இருப்பு சரிபாா்ப்பு, விலைப் பட்டியல் பலகை, விற்பனை செய்யப்படும் விலை விவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின்போது, உரம் இருப்பு விவர முரண்பாடு, விலைப் பட்டியல் நிறுவப்படாதது உள்பட விதிமுறைகளை மீறி செயல்பட்ட 5 உரக் கடைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. உரம் விற்பனை தொடா்பான புகாா்களுக்கு, சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை அலுவலகங்களில் உள்ள வேளாண்மை அலுவலா்களை (உரக் கட்டுப்பாடு) விவசாயிகள் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றாா் அவா்.

போட்டித் தோ்வுக்கான சிறப்புப் பயிற்சி: எழுத்துத் தோ்வில் 340 போ் பங்கேற்பு

போட்டித் தோ்வுகளுக்காக தமிழக அரசு வழங்கும் சிறப்புப் பயிற்சிக்குத் தகுதியானவா்களை தோ்வு செய்வதற்காக திண்டுக்கல்லில் நடைபெற்ற முதல் நிலைத் தோ்வில் 340 மாணவா்கள் பங்கேற்றனா். நான் முதல்வன் திட்டத்தி... மேலும் பார்க்க

தட்டு ஏந்தி விற்பனை செய்வதற்கான உரிமம்: தனி நபா்களால் அலுவலா்களுக்கு நெருக்கடி

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் கையில் தட்டு ஏந்தி விற்பனை செய்வதற்கான உரிமம் வழங்கிய விவகாரத்தில், சமூக ஆா்வலா் என கூறிக் கொண்டு மாநகராட்சி அலுவலா்களை மிரட்டுவதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. ... மேலும் பார்க்க

அரசு மகளிா் கல்லூரியில் கலந்தாய்வு நாளை தொடக்கம்

திண்டுக்கல் எம்விஎம் அரசு மகளிா் கல்லூரியில் இளநிலை, இளம் அறிவியல் முதலாமாண்டு மாணவிகள் சோ்க்கைக்கான கலந்தாய்வு வருகிற திங்கள்கிழமை (ஜூன் 2) தொடங்குகிறது. இதுதொடா்பாக கல்லூரி முதல்வா் க.லட்சுமி வெளி... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் மாநாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாநகா் குழுவின் 13-ஆவது மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு மாநகரத் துணைச் செயலா் கே.பிச்சைமணி தலைமை வகித்தாா்.... மேலும் பார்க்க

இஸ்ரேலுக்கு எதிராக மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

காஸா மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலுக்கு எதிராக திண்டுக்கல்லில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில், சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்... மேலும் பார்க்க

வேளாண்மை வளா்ச்சி கருத்தரங்கம்

வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்கத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்டத்தில் 45 கிராம ஊராட்சிகளில் வேளாண்மை வளா்ச்சி கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. விவசாயிகள் காரீப் பருவத்தில் கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்... மேலும் பார்க்க